tamilnadu

img

சிபிஎம் ஒடிசா மாநில முன்னாள் செயலாளர் தோழர் சிவாஜி பட்நாயக் மறைவு

புதுதில்லி, மே 24- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மத்தி யக்குழு உறுப்பினரும், ஒடிசா  மாநிலக்குழுவின் முன்னாள் செயலாளருமான தோழர் சிவாஜி பட்நாயக் மே 23  அன்று காலமானார். அவருக்கு  வயது 92. அவரின் மறைவுக்கு கட்சியின் அரசியல் தலைமைக் குழு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அரசியல் தலைமைக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது: சுதந்திரப் போராளிகளின் குடும்பத்தில் பிறந்தவர் தோழர் சிவாஜி பட்நாயக். மாணவப் பருவத்திலேயே  விடுதலை இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டவர். இளம் வயதிலேயே ஒன்றாக இருந்த இந்தியக் கம்யூ னிஸ்ட் கட்சியில் இணைந்து, வெகு விரை விலேயே கட்சியின் மாநில செயற்குழு விற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கட்சி 1964இல் பிளவுபட்டபோது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை அமைப்பதில் முக்கியப் பங்காற்றி னார். ஒடிசா மாநிலக்குழுவின் செயலாளராக 1972 முதல் 1990  வரை செயல்பட்டார். 1978இல் நடைபெற்ற கட்சியின் பத்தா வது அகில இந்திய மாநாட்டில் மத்தியக் குழுவிற்குத் தேர்ந் தெடுக்கப்பட்டு,1989 வரை அதில் தொடர்ந்தார். தோழர் சிவாஜி பட்நாயக் மாநிலத்தின் விவசாய இயக்கத் திலும், தொழிற்சங்க இயக்கத் திலும் செயல்பட்டார். ஒடிசாவில் சிஐடியு அமைக்கப்பட்டபோது அதன் முதல் தலைவ ராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நாடாளுமன்ற மக்களவைக்கு புவனே ஸ்வர் தொகுதியிலிருந்து மூன்று முறை தேர்ந் தெடுக்கப்பட்டார்.  அவருடைய நேர்மைக்காக  மிகவும் விரிவான அளவில்மதிக்கப்பட்டார். தோழர் சிவாஜி பட்நாயக்கை இழந்து வாடும் அவர் தம் மனைவி பிரதிபா, மூன்று மகன் கள், மகள் மற்றும் குடும்பத்தைச் சேர்ந்த  இதரர்களுக்கும், கட்சியின் அரசியல் தலைமைக்குழு தன் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறது என்று இரங்கல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

;