tamilnadu

கோவை மாவட்ட முன்னாள் ஆட்சியருக்கு அபராதம்

கோவை மாவட்ட முன்னாள் ஆட்சியருக்கு அபராதம்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு 

சென்னை, மே 24- கோவையைச் சேர்ந்தவர் முதியவர் ஜான் சாண்டி (74). இவருக்குச் சொந்தமான நிலத்தின் பட்டா தொடர்பான ஆவணத்தில் 2 பேரின் பெயரை நீக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். நீதிமன்ற உத்தரவு இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் பெயரை நீக்குவது தொடர்பாக 2 மாத காலத்திற்குள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கடந்த 2023 ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்திருந்தது. குற்றச்சாட்டு இருப்பினும் 2 மாதங்கள் ஆகியும் இது தொடர்பாக உரிய உத்தரவை, அப்போதைய கோவை மாவட்ட ஆட்சியராக இருந்த கிராந்தி குமார் பாடி பிறப்பிக்கவில்லை. அதோடு மாவட்ட வருவாய் அலுவலர் சர்மிளா மற்றும் வருவாய்க் கோட்டாட்சியர் கோவிந்தன் உள்ளிட்டோர் உரிய பணியை மேற்கொள்ளவில்லை. நீதிமன்ற அவமதிப்பு இதனைத் தொடர்ந்து மனுதாரர் ஜான் சாண்டி நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த வழக்கானது நீதிபதி வேல்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. நீதிபதியின் உத்தரவு நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டபடி, கோவை மாவட்ட முன்னாள் ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, மாவட்ட வருவாய் அலுவலர் சர்மிளா, வருவாய்க் கோட்டாட்சியர் கோவிந்தன் உள்ளிட்டோருக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, 3 பேரும் தங்களுடைய ஊதியத்திலிருந்து மனு தாரருக்கு இழப்பீடாக வழங்க வேண்டும். வட்டாட்சியர் மணிவேலுக்கு ஒரு மாத கால சிறைத் தண்டனை மற்றும் ஒரு மாத ஊதியத்தை மனுதாரருக்கு இழப்பீடாக வழங்க வேண்டும். மேல்முறையீடு செய்வதற்கு ஏதுவாக வட்டாட்சியருக்கு விதிக்கப்பட்ட தண்டனை ஒரு மாதத்திற்கு நிறுத்தி வைக்கப்படுகிறது. செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வட்டாட்சியர் வெங்கட்ராமனுக்கு, மற்றொரு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.