தமிழ்நாட்டில் வசிக்கும் பழங்குடி மக்களுக்கு வன உரிமைச் சட்டம் 2006-ன் படி நில உரிமைச் சான்று (பட்டா), வன மகசூல் சேகரிக்கும் உரிமை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை நிறைவேற்றக் கோரி அரசுத்துறை செயலாளர்களிடம் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.டில்லிபாபு, பொதுச் செயலாளர் ஆர்.சரவணன், துணைத் தலைவர் ஏ.வி.சண்முகம் ஆகியோர் மனுகொடுத்து வலியுறுத்தினர்.