tamilnadu

img

‘எங்களைப் பொறுத்தவரை கம்யூனிஸ்ட்கள் தான் கடவுள்’

தஞ்சாவூர் நகரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளர் சங்கங்களின் சார்பாக நடைபெறும் போராட்டங்களில் தவறாமல் கலந்து கொள்வார்; நம்மோடு கைதாகியும் இருப்பார் ‘விசிறி சாமியார்’. அதேபோல் 5.1.2022 வி.ச., வி.தொ.ச காத்திருப்புப் போராட்டத்தில், காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டதால் ஷாமியானா பந்தல் அமைக்க முடியாத நிலையில், கொளுத்தும் வெயிலையும் பொருட்

வரும்போது மல்லிகை உதிரிப்பூக்களுடன் வருவார். அனைவர் தலையிலும் பூக்களை தூவி, விசிறியினால் விசிறிவிட்டு சாக்லெட்டும் வழங்கி அனைவரையும் வணங்குவார். காத்திருப்பு போராட்டத்திலும் அதேபோல் செய்தார். நான் அவரை அருகில் அமர வைத்து, “ஏன் இப்படி மலர் தூவுகிறீர்கள்” என்று விவரம் கேட்டேன். கம்யூனிஸ்டுகள் ஏழை, எளிய மக்களுக்காக போராடுகிறீர்கள். அதனால் என்னை பொறுத்தவரை நீங்கள்தான் கடவுள். எனவே தான் எல்லோரையும் மலர்கள் தூவி கடவுளை வணங்குவது போல் கம்யூனிஸ்ட்களை வணங்குகிறேன் என்றார். 

தஞ்சை கே.பக்கிரிசாமி பதிவிலிருந்து