tamilnadu

img

காலநிலை நீதிக்காக ஒரு ஓட்டம்

டியூனிஸ் நகரில் நவம்பர் 6 முதல் 18 (2022) வரை ஷார்ம் எல் ஷேக் (Sharm El-Sheikh)நகரில் காப்27 (COP27) காலநிலை உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. ஐநா இதற்கான ஏற்பாடுகளைத் தொடங்கியுள்ளது. காலநிலை மாற்றத்தின் கெடுதிகளை அதிகம் அனுப விக்கும் ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளை சேர்ந்த இளைஞர்கள் இம்மாநாட்டில் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்த நீதி கேட்டு ஒரு ஓட்டத்தை ஏற்பாடு செய்துள்ளனர். சூழல் சீரழிவிற்கு எந்த விதத்திலும் காரண மாக இல்லாத நாடுகளைச் சேர்ந்த இவர்கள் டுனீஷியா தலைநகர் டியூனிஸில் ஒன்றுகூடினர். கடந்த காப் 26 கிளாஸ்கோ மாநாட்டில் மேற்கித்திய நாடுகளால் ஏழை நாடுகளில் சூழல் சீரழிவால் நிகழும் கெடுதிகளைக் குறைக்க, பாதிக்கப்பட்ட வர்களுகு மறுவாழ்வு தர கொடுப்பதாக அறிவித்த 350 மில்லியன் டாலர் நிதி காற்றில் பறக்கவிடப் பட்டது. ஆபத்தை எதிர்நோக்கி புவி வெப்ப உயர்வால் கடலில் மூழ்கும் நிலையில் இருக்கும் டுவாலு என்ற குட்டி பசிபிக் தீவு நாடு உட்பட பல நாடுகளும் கடலில் வரும் ஒரு சில ஆண்டுகளில் மூழ்கும் நிலையில் உள்ளன.

இவர்களுக்கு ஏற்படும் சேதங்களை சீர்செய்ய மேலை நாடுகள் உறுதியளித்த எந்த நிதியும் இன்னும் வழங்கப்பட வில்லை. பூமியின் தென்கோளப் பிரதிநிதியாக காப்26 மாநாட்டில் கலந்துகொண்ட சூழல் காக்க எதையும் செய்யாத பணக்கார நாடுகள் தங்கள் வணிகத்தை மேம்படுத்துவதிலேயே கிளாஸ்கோவில் அதிக நேரத்தை செலவிட்டன. உண்மையான தீர்வு அடி மட்டத்தில் இருந்தே தொடங்கப்படவேண்டும். ஏழை மக்கள் விழித்துக்கொண்டு தெருவில் இறங்கிப் போராடினால் மட்டுமே உள்ளூர் அரசியல் முதல் உலக அரசியல் வரை மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்றுறு மெக்சிகோவை சேர்ந்த 20 வயதான சூழல் போராளி மெரியா ரேஸ் (Maria Reyes) கூறுகிறார். மேற்கத்திய நாடுகள் ஏற்படுத்தும் சூழல் சீரழிவு களால் தெற்காசியா, ஆப்பிரிக்கா, இலத்தீன் அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்த மக்கள் நீதி கேட்டு போராடவேண்டும் என்று 2019 முதல் வெள்ளிக்கிழமை பள்ளி வேலை நிறுத்தங்களை (School strikes for climate change) நடத்திய பாகிஸ்தானைச் சேர்ந்த 23 வயதான ஆயிஷா சித்திகா (Aysha Siddiqa) கூறுகிறார்.

தொடர்கதையாகும் சூழல் துயரங்கள்
பாகிஸ்தானில் வாழ்வதே ஆபத்தானதாகி விட்டது. வெப்ப அலைத் தாக்குதல்கள் சாதாரண மாகிவிட்டன. பனிப்பாறைகள் உருகி திடீர் வெள்ளப் பெருக்குகள் எங்கள் கிராமங்களை மொத்தமாக அடித்துச்செல்கின்றன. இந்நிலையை சமாளித்து எப்படி வாழ்வது? எங்கள் குடும்பம் சொத்து சுகம் கலாச்சாரம் போன்றவை அழிகின்றன. எப்படி இவற்றை மீட்டெடுப்பது? இதனால் போராடுவது தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என்று அவர் மேலும் கூறுகிறார். காப்27 மாநாட்டிலேனும் காலநிலை அவசரத்தை உணர்ந்து அதை ஓரளவேனும் சரி செய்ய ஆட்சியாளர்கள்முயற்சிப்பர் என்ற நம்பிக்கையுடன் டியூனிஸ் கூட்டத்தில் கலந்து கொண்ட போராளிகள் எகிப்திற்கு செல்கின்றனர். வளரும் நாடுகளின் 3.6 பில்லியன் மக்களில் நானும் ஒருவன். காலநிலை மாற்றத்திற்கு எந்தவிதத்தி லும் காரணமாக இல்லாத நாங்கள் அதன் கெடுதிகளை மட்டுமே இன்று சந்திக்கிறோம் என்று செயலிற்கு வரும் இருபது ஆண்டில் 700 மில்லியன் கார்பன் டை ஆக்சைடை வெளிவிடும் என்று கணக்கிடப்பட்டுள்ள உலகின் நீண்ட கசடு எண்ணைக் குழாய் கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைக்கப்படுவதை எதிர்த்துப் போராட்டங்களை ஒருங்கிணைத்த கென்யாவின் 34 வயதான சூழல் போராளி ஓமர் எல்மாவி (Omar Elmawi) கூறுகிறார்.

அழிந்தவற்றில் இருந்து மீண்டும் கட்டி யெழுப்பவே காப்27 மாநாடு நோக்கி செல்கிறோம். நாங்கள் வெறும் காலநிலை பலிகள் (climate victims) மட்டுமல்ல. அதன் பின் ஏற்படும் துன்பங்களை இப்போதும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம் என்கிறார் அவர். உலக மக்கள் ஒன்றுகூடினால் பூமியில் சில மனிதர்கள் நடத்தும் சூழல் கொடுமைகளை உணர்ந்து சூழல் சுரண்டல்களை நம்மால் தடுக்கமுடியும். அப்போது இதற்கு நல்ல தீர்வு கிடைக்கும். டியூனிஸ் முகாமிற்கு ஏற்பாடு செய்த அமைப்புகளில் ஒன்றான பசுமை இயக்கம் காப்27 விளம்பரதாரராக உலகில் அதிக பிளாஸ்டிக் மாசிற்கு காரணமாக இருக்கும் கோக்கோகோலா நிறுவனம் ஏற்கப்பட்டிருப் பதைக் குறித்து கண்டனம் தெரிவித்துள்ளது. சூழலை நாசப்படுத்தும் அமைப்பே சூழலைக் காப்பாற்றுவது பற்றி பேசும் மாநாட்டின் அமைப்பாளர்களில் ஒருவராக எவ்வாறு இருக்கமுடியும்? 99 சதவீத பிளாஸ்டிக் பொருட்களும் புதைபடிவ பொருட்களில் இருந்தே உற்பத்தி செய்யப்படுகின்றன. பூமியைக் காக்கும் முயற்சியில் காப்27 மாநாட்டின் மூலம் நல்ல முடிவுகள் ஏற்படுமா? ஆப்பிரிக்காவில் இருந்து ஓட்டம் நடத்தும் இளைஞர்கள்; மட்டும் இல்லை உலகமே இதற்காகவே நம்பிக்கையுடன் காத்திருக்கிறது.