சென்னை, செப். 27- மிலாது நபியையொட்டி அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து சனி, ஞாயிறு மற்றும் வருகிற 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி என்று விடுமுறை தினங்கள் வரு கின்றன. மேலும் பள்ளி மாணவர்களுக்கும் காலாண்டு விடுமுறை தொடங்கி விட்டது. இந்த நிலையில், விமானங்களில் பயணி களின் டிக்கெட் கட்டணங்களும் பல மடங்கு உயர்ந்துள்ளன. சென்னையில் இருந்து தாய்லாந்து, பாங்காக் செல்ல, வழக்கமான விமான கட்டணம் ரூ. 9,720 ஆகும். ஆனால் தற்போது ரூ. 32,581 உயர்த்தப்பட்டுள்ளது. துபாய்க்கு வழக்கமான கட்டணம் ரூ.10,558, தொடர் விடுமுறையால் ரூ. 21,509 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் சிங்கப்பூர் செல்ல வழக்கமான கட்டணம் ரூ. 9,371. ஆனால் தற்போதைய கட்டணம் ரூ. 20,103. உயர்த்தப்பட்டுள்ளது.