மீன்பிடி தடைக்காலம் நிறைவு கடலுக்குச் செல்ல மீனவர்கள் ஆயத்தம்
சென்னை, ஜூன் 13 - 61 நாட்கள் நீடித்த மீன்பிடி தடைக்காலம் சனிக்கிழமை (ஜூன் 14) நள்ளிரவுடன் முடி வடைவதால், விசைப்படகு மீன வர்கள் மீண்டும் தொழிலுக்கு செல்ல ஆயத்தமாகி வருகின்ற னர். தடையின் நோக்கம் கோடைக்காலமான ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று மாதங்கள் மீன்களின் இனப்பெருக்கத்திற்கு உகந்த காலம் என மீன்வளத் துறை ஆய்வு செய்து அறிவித்துள்ளது. இந்த காலக்கட்டத் தில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொறிப்ப தால், அதற்கு இடையூறு ஏற்படாத வகையில் 2001 ஆம் ஆண்டு முதல் ஆழ்கடலில் மீன் பிடிக்கச் செல்லும் விசைப்படகுகளுக்கு தடை விதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழகத்தின் கிழக்கு கடல் பகுதியான வங்கக்கடலில் ஆண்டுதோறும் ஏப்ரல் 14 ஆம் தேதி நள்ளிரவு முதல் ஜூன் 14 ஆம் தேதி நள்ளிரவு வரை 61 நாட்கள் விசைப்படகுகள் மீன்பிடிக்க அனுமதிக்கப்படு வதில்லை. ஆரம்பத்தில் 45 நாட்களாக இருந்த மீன்பிடி தடைக்காலம் கடந்த சில ஆண்டுகளாக 61 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு முதல் கன்னியாகுமரி மாவட்டம் நீரோடி கிரா மம் வரை 1,076 மைல் தொலைவில் கிழக்கு கட லோரப் பகுதியில் இந்த தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. 12 மாவட்டங்களில் 6,700 விசைப்படகுகள் கடலுக்குள் செல்லா மல் கரையில் ஓய்வெடுத்து வந்தன. மீனவர்கள் ஆயத்தம் மீண்டும் மீன்பிடிக்கச் செல்ல இன்னும் ஒருநாள் மட்டுமே இருப்பதால், விசைப்படகு களில் ஐஸ் கட்டிகளை நிரப்பி வைப்பது, தேவையான அளவு குடிநீர் கேன்களை வாங்கு வது, உணவு சமைக்க தேவையான பொருட் களை எடுத்துச் செல்வது போன்ற பணிகளில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். சென்னை காசி மேடு மீன்பிடி துறைமுகம் பரபரப்பாக காணப் படுகிறது. வெள்ளியன்று நள்ளிரவு முதல் விசைப் படகுகளில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் மூன்று நாட்கள் முதல் ஏழு நாட்களுக்குப் பிறகு கரை திரும்புவார்கள் என்பதால், அதன் பிறகு பெரிய சைஸ் மீன்களின் விலை குறையத் தொடங்கும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.