tamilnadu

img

ஹோண்டுராஸ் அரசின் முதல் வெற்றி

தென்னமெரிக்க நாடான ஹோண்டுராஸில், இடது சாரி பெண் ஜனாதிபதியாக சியாமரா காஸ்ட்ரோ  தேர்தலில் வெற்றி பெற்றதை சமீபத்தில் கொண்டாடி னோம். ஹோண்டுராஸ் இயற்கை வளம், தாதுப்பொருட்கள் நிறைந்த நாடு. இதற்கு முன்பு பல சதிகள் மூலம் ஆட்சிப்பொறுப்பை கைப்பற்றியவர்கள் நாட்டின் இயற்கை  வளத்தை பன்னாட்டு கம்பெனிகள் மற்றும் அவற்றின் துணை உள்நாட்டு நிறுவனங்கள் சூறையாட அனுமதித்தனர். குவாபினோலா என்ற நதியின் கரைகளில் இரும்புத்தாது எடுக்கும் திறந்தவெளி சுரங்கத்தை பன்னாட்டு கம்பெனி துவக்கியுள்ளது. இதனால் குவாபினோலா நதி மாசுபடுகிறது. மக்கள் நிலத்தை இழந்து நதியையும் இழக்கும் நிலையில் 2019 முதல் சுரங்க கம்பெனிக்கு எதிராக போராடுகின்றனர் .புனல் மின் திட்டங்களும் மக்களின் நிலத்தை அபகரித்துள்ளது. 2019 செப்டம்பர் 1 முதல் போராட்டங்களுக்கு தலைமை தாங்கிய 8 பேர் சிறையில் உள்ளனர். சுரங்க கம்பெனி போலியான சாட்சியங்களை தயாரித்து, பொய்க்குற்றம் சாட்டி தொடுத்த வழக்கில் தான்  அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் . 8 பேர் விடுதலைக் காக மக்கள் போராடினர். சியாமரா காஸ்ட்ரோ தனது தேர்தல் வாக்குறுதியில் இவர்களின் விடுதலைக்காக நடவடிக்கை எடுப்பதாக கூறி இருந்தார். கடந்த சில வாரங்களாக நீதிமன்றத்தில் விசாரணை தொடர்ந்து நடைபெற்றது. இவர்கள் தொடர்ந்து தடுப்புக் காவலில் இருக்க நீதிமன்றம் உத்தரவிட்டது . பிப்ரவரி 10 -ல் ஹோண்டுராஸின் உச்ச நீதிமன்றம் இந்த  தடுப்புக்காவல் சட்டவிரோதமானது .எட்டு பேரும் உடனடி யாக விடுதலை செய்ய உத்தரவிட்டது . 8 பேர் விடுதலை அரசின் புதிய பாதைக்கு வெற்றி. நிலம் நதிகளை பாது காக்கவும் இவைகளைப் பாதுகாக்கப் போராடும் மக்களை யும் புதிய அரசு காத்திட வேண்டும்.