tamilnadu

img

மோகனூரில் பட்டாசு வெடித்து விபத்து - 3 பெண்கள் உள்பட நான்கு பேர் பலி

நாமக்கல், டிச.31- நாமக்கல் மாவட்டம் மோக னூர்  மேட்டு தெருவை சேர்ந்த வர் தில்லை குமார். பட்டாசு விற்  பனை செய்ய லைசன்ஸ் பெற்றுள்  ளார். அருகில் உள்ள குமரி பாளையத்தில் பட்டாசு குடோன்  வைத்துள்ளார். இந்நிலையில், புத்தாண்டு விற்பனைக்காக, அதிக அளவு பட்டாசுகளை தனது வீட்டில்  குவித்து வைத்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் சனிக்கிழமை அதிகாலை சுமார் மூன்று மணி அளவில் பயங்கர சத்தத்துடன்  பட்டாசுகள் வெடித்து சிதறின. இதனை அடுத்து அக்  கம் பக்கத்தினர், திடீர் சத்தத்தை கேட்டு வெளியே ஓடி வந்து பார்த்த போது வீட்டிலிருந்த சமையல் எரி வாயு சிலிண்டர் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் தீப்பற்றி எரிந்த நிலையில் இருந்தது. மேலும், தில்லை குமார் வீடு  அருகில் இருந்த ஐந்துக்கும் மேற்பட்ட வீடுகளுக்கும் தீ பரவியது. இந்நிலையில், வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருந்த  தில்லை குமார் (35), அவருடைய தாயார்  செல்வி (60), மனைவி பிரியங்கா (20) ஆகியோர் விபத்தில்  சிக்கி  உயிரிழந்தனர். தில்லை குமார் வீட்டின் அருகில் வசித்து வந்த பெரியக்கா என்ற 72 வயது மூதாட்டியும் விபத்தில் பலியா னார். தகவல் அறிந்து  வந்த  நாமக்கல் மற்றும் மோகனூர் காவல்துறையினர் இடிபாடு களுக்குள் சிக்கி இருந்த உடல்  களை மீட்டு பிரேத பரிசோதனைக்  காக நாமக்கல் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

பட்டாசு வெடி விபத்து நிகழ்ந்த வீட்டின் அருகில் வசித்த சுமார்  15-க்கும் மேற்பட்டோர் காயங்  களுடன் நாமக்கல் மற்றும் மோக னூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நாமக் கல், கரூர், மோகனூர் ஆகிய பகுதி யிலிருந்து தீயணைப்பு வாக னங்கள் வரவழைக்கப்பட்டு, 3 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீ முற்றிலும் அணைக்கப் பட்டது.  விபத்து குறித்து வரு வாய் துறை அலுவலர்கள் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர். நாமக்கல் மாநிலங்க ளவை உறுப்பினர் கே.ஆர்.ஆர்.என்.ராஜேஷ் குமார், வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், நாமக் கல் சட்டமன்ற உறுப்பினர் ராம லிங்கம் உள்ளிட்டோர் விபத்து நடந்த பகுதிகளை பார்வையிட்ட பிறகு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மக்களை  சந்தித்து ஆறுதல் கூறினர்.  வீட்டில் ஏற்பட்ட மின்கசிவு கார ணமாக இந்த பட்டாசு விபத்து  நிகழ்ந்திருக்கலாம் என, முதல்  கட்ட தகவலாக தெரியவந்துள் ளது. சேலம் சரக போலீஸ் டிஐஜி பிரவின் குமார் அபினவ்,  நாமக் கல் ஏடிஎஸ்பி மணிமாறன், டிஎஸ்பி சுரேஷ், ஆர்.டி.ஓ. மஞ் சுளா, மோகனூர் தாசில்தார் ஜானகி உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்தில் முகாம் இட்டு மீட்பு பணிகளை கவனித்தனர். பட்டாசு விபத்தில் உயிரி ழந்தோருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் தலா ரூ.2 லட்சம் நிவா ரணம் அறிவித்துள்ளார்.