tamilnadu

உலகச் செய்திகள்

தொழிலாளர்களின் ஊதியத்தை உயர்த்த அழுத்தம் தரும் வகையில் ஏராளமான கோரிக்கை ஊர்வலங்களை ஜப்பான் தொழிற்சங்கங் கள் நடத்தியுள்ளன. ஏற்கனவே தொழிலாளர்களின் கோரிக்கைகள் தரப்பட்டுள்ளன. ஆனால் பெரும்பா லான நிறுவனங்கள் ஊதியத்தை உயர்த்த முன்வர வில்லை. இதனால் நாடு தழுவிய அளவிலான போ ராட்டங்கள் நடக்கின்றன. சில மையங்களில் இந்தப்போ ராட்டங்கள் வேலை நிறுத்தங்களாகவும் மாறியுள்ளன.

அண்மையில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக நடந்த போராட்டங்களின் அனுப வத்தால் நாட்டின் சில பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடு களை நிரந்தரப்படுத்த கனடா முடிவெடுத்துள்ளது. அண்டை நாடுகளுடனான போக்குவரத்து மற்றும்  சர்வதேச எல்லைகள் வழியான வர்த்தகம் ஆகிய வற்றைப் பாதுகாக்கவே இத்தகைய நடவடிக்கைகள் என்று தெரிவித்துள்ளனர். ஓன்டேரியோ மாகாண அரசு இது குறித்த புதிய சட்டத்தை இயற்றியுள்ளது.

கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மிக விரைவாக கியூபா மீண்டு வருகிறது. கல்வி உள்ளிட்ட பொதுப் பணிகள் எந்த அளவுக்கு முன்னேறியுள்ளன என்பதை அந்நாட்டின் ஜனாதிபதியும், கியூபக் கம்யூனிஸ்ட் கட்சி யின் முதல் செயலாளருமான மிகேல் டியாஸ் கானல் பெர்முடாஸ் நேரடியாகப் பார்வையிட்டு வருகிறார். ரெக்லா நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிக்கூடங்களுக்குச் சென்ற அவர், புதிய திட்டங்களை நோக்கிச் செல்லும் அதே வேளையில், பழைய திட்டங்களை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.