tamilnadu

img

“உணர்வெல்லாம் தீக்கதிர்” நெஞ்சம் நெகிழ வைத்த நிகழ்வு!

சேலம், மே 13- சேலத்தில் ஒருவர் துணையின்றி நடமாட முடியாத சூழலிலும், தீக்கதிர் நாளிதழ் தடையின்றி கிடைத்திட சந்தா வழங்கிய சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்டம், கெங்கவல்லி இடைக்கமிட்டியின் மூத்த தோழர் ஜோதிகுமார். உடல்நலக்குறைவின் காரணமாக அண்மையில் அவரின்  ஒரு கால் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. இதுகுறித்து அறிந்த  சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன், மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டி ருந்த அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.  இந்நிலையில், ஒரு கால் அகற்றப்பட்டு மருத்துவர்கள் முழு ஓய்வெடுக்க அறிவுறுத்தியிருந்த நிலையில், சிபிஎம் சேலம் மாவட்டக்குழு அலுவலகத்திற்கு ஜோதிகுமார் நேரில் வந்தார். தீக்கதிர் நாளிதழுக்கான ஆறுமாத சந்தா தொகையை அலுவலகச் செயலாளர் பி.சந்திரனை சந்தித்து வழங்கினார்.  அப்போது, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.வெங்கடபதி, எம்.குணசேகரன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி.பன்னீர்செல்வம், பி.பாலகிருஷ்ணன் ஆகியோர் உடனி ருந்தனர். மற்றொருவரின் துணை யின்றி நடக்க முடியாத சூழ்நிலை யிலும் தீக்கதிர் நாளிதழ் தனக்கு தடையின்றி கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் சந்தா தொகையை வழங்கிய தோழரின் செயல் அனைவரை யும் நெகிழச் செய்தது.