tamilnadu

img

வைக்கத்தில் உள்ள தந்தை பெரியார் நினைவகம் புனரமைக்கப்படும்

கோவை,அக்.23- கேரளா மாநிலம் வைக்கம் நகராட்சியில் அமைந்துள்ள தந்தை பெரியார் நினைவகத் தில் தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் அக்டோபர் 22 அன்று  நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.  பின்னர் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறுகையில், தந்தை பெரியார் சமூக  நீதி காக்க போராடிப் பெற்ற வெற்றியை நினைவு கூரும் வகையில்  வைக்கத்தில் பெரி யார் நினைவகம் அமைந்துள்ளது.  இந்த நினைவிடத்தில் தந்தை பெரியாரின்  திருவுரு வச் சிலை, அன்னாரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் வகையில் பொது  மக்களின் பார்வைக்காக நிரந்தர புகைப்படக் கண்காட்சி அரங்கம், பெரியாரின் வாழ்க்கை  வரலாற்று புத்தகங்கள் மற்றும் செய்தித் தாள்கள் அடங்கிய நூலகம், சிறுவர்கள் விளையாடி மகிழ விளையாட்டு சாத னங்கள் மற்றும் புல்வெளியுடன் கூடிய சிறுவர் பூங்கா உள்ளிட்டவையுடன் அமையப் பெற்றுள்ளது. தந்தை பெரியார் நினைவகமானது சுமார்  28 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட தாகும். இந்த நினைவகத்தில் அமைந்துள்ள தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் புகைப்படங்கள் அடங்கிய நிரந்தர புகைப்படக் கண்காட்சிக்கூடம், பார்வையாளர் மாடம் மற்றும் சிறுவர் பூங்கா ஆகியவற்றினை புனரமைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு  முதலமைச்சர்  உத்தரவிட்டுள்ளார். அதன டிப்படையில், இந்நினைவகத்தில் ஆய்வு மேற் கொண்டு தேவையான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படவுள்ளது என்று  தெரிவித்தார். ஆய்வில் திருப்பூர் மாவட்ட குற்றத்துறை அரசு வழக்கறிஞர் கனகசபாபதி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஆ.செந்தில் அண்ணா ஆகியோர் கலந்துகொண்டனர்.