tamilnadu

img

விவசாயிகள் டிராக்டர் பேரணி

விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்கான சட்ட உத்தரவாதம் அளிக்க வேண்டும். மின்சார சட்டத்திருத்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும். தில்லி போராட்டத்தில் உயிர் நீத்த 714 பேருக்கு நினைவிடம் அமைக்க வேண்டும். அவர்களது குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.  தில்லியில் போராடிய விவசாயிகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்பப்பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 26 குடியரசுத் தினத்தன்று நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் சம்யுக்த கிஷான் மோர்ச்சா சார்பில் டிராக்டர் பேரணி நடைபெற்றது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நூற்றுக்கணக்கான டிராக்டர்கள் அணிவகுத்தன. திருவாரூரில் நடைபெற்ற டிராக்டர் பேரணியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் சாமி. நடராஜன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.