நாமக்கல், ஏப்.12- நாமக்கல் அருகே அரசு மற்றும் விவசாயி களுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிர மித்துள்ள போலிச் சாமியார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை மீட்கக் கோரியும் விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை அடி வாரப் பகுதியான திருச்சி மாவட்ட எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது குண்டனி நாடு அடுக்கம் புதுக்கோம்பை கிராமம். இக்கிராமத்தில் மாவட்ட வருவாய் துறைக்கு சொந்தமான 10 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலத்தினை போலிச் சாமியாரான கார்த்தி கேயன் என்கின்ற ராஜா ராகவன் என்பவர் ஆக்கிர மிப்பு செய்து மாந்திரீகம் உள்ளிட்ட சமூக விரோத செயல்களுக்கு பயன்படுத்தி வருகின்றார். இதே போல், அப்பகுதியில் உள்ள விவசாயிகளின் பட்டா நிலத்தையும் 5 ஏக்கருக்கும் மேலாக அடாவடித்தனமாக மிரட்டி அபகரித்துள்ளார். இந்த ஆக்கிரமிப்பு நிலத்தில் அனுமதி யின்றி கோசாலை நடத்தி வருவதுடன், கொல்லி மலையில் இருந்து வரக்கூடிய நீர்வழிப் பாதையையும் ஆக்கிரமித்து கட்டடம் கட்டி யுள்ளார். மேலும், அப்பகுதியில் இருக்கும் செம்மண் உள்ளிட்ட கனிம வளங்களை திருடி சட்டவிரோதமாக விற்பனை செய்து வருவதாகக் கூறப்படுகிறது. இதுமட்டுமின்றி அப்பகுதியில் இரவு முழுவதும் பெண்களை வைத்து இரவு நேர பூஜை நடத்தி வருவதால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
பெண்களின் சடலத்தை வைத்து பூஜை 2 முறை கைது
முன்னதாக, மேற்கண்ட போலிச் சாமியார் இளம் பெண்ணின் சடலத்தை வைத்து மாந்திரீக பூஜை நடத்தி வந்ததாக கடந்த 2016 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இதன்பின்னர் பெரம்பலூர் நகர காவல் நிலையம் பின்புறம் உள்ள வீட்டில் வசியம் செய்வதாக கூறி பிணத்தை வைத்து இரவு நேர பூஜை செய்து வந்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். ஆகவே, மேற்கண்ட போலிச் சாமியாரின் செயலை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். அவர் ஆக்கிரமித்து வைத்துள்ள நிலங்களை மீட்டு ஏழை, எளியோருக்கு வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடை பெற்றது. இப்போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாய சங்கத்தின் நாமக்கல் மாவட்டச் செயலாளர் பெருமாள் தலைமை வகித்தார். அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் பழனிச்சாமி, இந்திய மாணவர் சங்கத்தின் மாநில தலைவர் கண்ணன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருச்சி புறநகர் மாவட்டத் தலைவர் பி.இராமநாதன்,
இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் தேன்மொழி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் உப்பிலியபுரம் ஒன்றிய செயலாளர் முத்துக்குமார், தமிழ்நாடு விவசாய சங்கத்தின் நாமக்கல் மாவட்ட நிர்வாகிகள் சதாசிவம், செல்வராஜ், ராஜேந்திரன், முருகேசன், மணப்பள்ளி பெருமாள் மற்றும் விவசாயிகள், பொதுமக்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டோரு டன் நாமக்கல் மாவட்ட வருவாய் கோட்டாட்சி யர் மல்லிகா, கொல்லிமலை வட்டாட்சியர் கிருஷ்ணன், நாமக்கல் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சேகர், நாமக்கல் காவல்துறை தணை கண்காணிப்பாளர் சுரேஷ் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த பேச்சுவார்த்தையில், ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள கட்டடத்திற்கு உடனடியாக சீல் வைப்பதாகவும், சம்பந்தப்பட்ட இடத்தை விரைவாக அரசு கைப்பற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதன்பேரில் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் ஆய்வு செய்து போலிச் சாமியாரின் மடத்திற்கு சீல் வைத்தனர்.