tamilnadu

img

அமராவதி சர்க்கரை ஆலையை திறக்க கோரிக்கை உடுமலையில் விவசாயிகள் குடும்பத்துடன் தர்ணா

அமராவதி சர்க்கரை ஆலையை திறக்க கோரிக்கை உடுமலையில் விவசாயிகள் குடும்பத்துடன் தர்ணா

உடுமலைப்பேட்டை, ஜூன் 5 - உடுமலை அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை யை திறக்க வலியுறுத்தி விவ சாயிகள் குடும்பத்தினருடன் வியாழனன்று தர்ணாவில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகேயுள்ள கிருஷ்ணாபுரத்தில், தமிழ்நாட்டின் முதல் பொதுத் துறை நிறுவனமான- அமரா வதி கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. கோவை, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 21 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள் உறுப் பினர்களாக உள்ளனர். சர்க்கரை ஆலை நிறுவி 60 ஆண்டுகளுக்கு மேலான நிலையில், இயந்திரங்கள் பழுதடைந்து, கரும்பு அர வைத் திறன் குறைந்த நிலை யில், இரண்டு ஆண்டு களாக ஆலை மூடப்பட்டுள் ளது. ரூ. 60 கோடி நிதி ஒதுக்கக் கோரிக்கை இதனால், விவசாயிகள், தொழிலாளர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வேலையிழந்துள்ளனர். ஆலையை நவீனப்படுத்த ரூ. 60 கோடி நிதி ஒதுக்க வேண்டும், என பல ஆண்டு களாக விவசாயிகளும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினரும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு எரிசாராய ஆலை திறக்கப்பட்டு, சில நாட்களிலேயே அது மூடப்பட்டது. சில மாதங்களுக்கு முன் சர்க்கரைத்துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகள் அமராவதி ஆலையை ஆய்வு செய்தும் இன்று வரை ஆலையை திறக்க வில்லை.  ஆர். சச்சிதானந்தம் எம்.பி., சாமி. நடராஜன் பங்கேற்பு எனவே, நடப்பாண்டு கரும்பு பதிவு மற்றும் அரவை மேற்கொள்ளும் வகையில், ஆலையைத் திறக்க வேண்டும் என மடத்துக்குளம் நால்ரோடு பகுதியில் வியாழனன்று தர்ணா போராட்டம் நடை பெற்றது.  இந்தப் போராட்டத்திற்கு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் செயலாளர் எம். எம். வீரப்பன் தலைமை  தாங்கினார். தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் சாமி.நடராஜன் போராட்டத்தை துவக்கி வைத்து பேசினார். இதில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின், திண்டுக் கல் தொகுதி நாடாளு மன்ற உறுப்பினர் ஆர்.  சச்சிதானந்தம், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலை வர் எஸ். வேல்மாறன் ஆகி யோர் கோரிக்கைகளை வலி யுறுத்தி உரையாற்றினர்.  விவசாயிகள் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் எம். ராமசாமி, திருப்பூர் மாவட்டச் செயலா ளர் ஆர். குமார், மாவட்டத் தலைவர் எஸ்.ஆர். மது சூதனன், தொப்பம்பட்டி ஒன்றியச் செயலாளர் கே. சின்னதுரை, அமராவதி கரும்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பாலதண்டபாணி உள்ளிட்ட திரளான விவசாயிகள் குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் கலந்து கொண்டனர். விவசாயிகள் சங்கத்தின் மடத்துக்குளம் தாலுகா தலைவர் ராஜ ரத்தினம் நன்றி கூறினார்.