அமெ. துணை ஜனாதிபதி வருகைக்கு எதிர்ப்பு: விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்
திருத்துறைப்பூண்டி, ஏப்.21- திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தலைமை தபால் நிலையம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் இந்தியாவிற்கு வருவதைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில், எஸ். சாமிநாதன் முன்னிலை வகித்தார். எஸ்.தம்புசாமி தலைமை தாங்கினார். எம் .ஜெயபிரகாஷ் நகரச் செயலாளர் எஸ். முத்துச்செல்வன், ஒன்றியச் செயலாளர் ஆகியோர் வரவேற்புரை ஆற்றினர். வடக்கு ஒன்றியச் செயலாளர் நடராஜன், முத்துப்பேட்டை ஒன்றியச் செயலாளர் ராஜேந்திரன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் ஆறு பிரகாஷ் ஆகியோர் பங்கேற்றனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆதரவு தெரிவித்து மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சி. ஜோதிபாசு, கேஜி.ரகுராமன், திருத்துறைப்பூண்டி தெற்கு ஒன்றியச் செயலாளர் டிவி. காரல்மார்க்ஸ், வடக்கு ஒன்றியச் செயலாளர் முத்துக்குமாரசாமி மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகரக் குழு தோழர்கள் கலந்துகொண்டு, ஒன்றிய அரசைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.