tamilnadu

சென்னை ரிசர்வ் வங்கி முன்பு ஜூன் 3-இல் விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

சென்னை ரிசர்வ் வங்கி முன்பு ஜூன் 3-இல் விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

நகைக் கடனுக்கான புதிய விதிமுறைகளை திரும்பப் பெறுக!

சென்னை, மே 24 - தங்க நகை கடன் பெற இந்திய ரிசர்வ்  வங்கி அறிவித்துள்ள புதிய விதிமுறை களை திரும்பப் பெற கோரி, சென்னை ரிசர்வ்  வங்கி முன்பு ஜுன் 3 அன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் சாமி.நடராஜன் விடுத்துள்ள அறிக்கையில், “விவசாயிகள், ஏழை-நடுத்தர மக்கள் தங்க ளிடம் உள்ள நகைகளை  கூட்டுறவு மற்றும்  வங்கிகளில் அடமானம் வைத்து விவசாயம்,  கல்வி, மருத்துவம் உள்ளிட்ட  அவசரத் தேவைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர். அடகு வைத்த நகையை திருப்ப முடியாத மக்கள் வட்டியை மட்டும் கட்டி மறு அட மானம் வைப்பதும் நடைமுறையில் உள்ளது. தற்போது இந்திய ரிசர்வ் வங்கியின் தங்க நகைக் கடன் பெறுவதற்கான அறிவிப்பு கள், நாடு முழுவதும் இருக்கிற விவசாயி களுக்கு, ஏழை, நடுத்தரப் பகுதி மக்களுக்கு  பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும். விவசாயி கள், ஏழை மக்கள் தங்களின் அவசரத் தேவை களுக்கு நகைக் கடன்களை பெற முடி யாது. நுண்நிதி நிறுவனங்களிடம், கந்து  வட்டிக்கு கையேந்தும் நிலைமை மேலும் அதி கரிக்கும். தங்க நகைக் கடன் வாங்குவ தற்கு இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய நிபந்த னைகளை ஏற்க முடியாது. எனவே தங்க நகைக்கடன் வாங்க இந்திய  ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள புதிய நிபந்தனை களை ரத்து செய்திடக் கோரி, ஜூன் 3 ஆம்  தேதி காலை 10 மணிக்கு, சென்னையில் இந்தியன் ரிசர்வ் வங்கி முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என தெரிவித் துள்ளார்.