tamilnadu

img

செங்கிப்பட்டியில் விவசாயிகள் சங்க உறுப்பினர் சேர்க்கை விழா

செங்கிப்பட்டியில் விவசாயிகள் சங்க  உறுப்பினர் சேர்க்கை விழா

றியம், செங்கிப்பட்டி-சாணூரப்பட்டியில் திங்கட்கிழமை தமிழ்நாடு விவசாயிகள் சங்க உறுப்பினர் சேர்க்கை விழா மற்றும் பொதுக்கூட்டம் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன் தலைமையில் நடைபெற்றது.  மாவட்ட துணைச் செயலாளர் கே.தமிழரசன் வரவேற்றார். தில்லி விவசாயிகள் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் விஜு.கிருஷ்ணன், அகில இந்திய துணைத் தலைவர் டி.ரவீந்திரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் சாமி. நடராஜன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.  இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார், திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் ஆர்.நடராஜன், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.வாசு, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநிலச் செயலாளர் எஸ். தமிழ்ச்செல்வி, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், விவசாயிகள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஒன்றியத் தலைவர் கெங்கை.பாலு நன்றி கூறினார். குறைந்தபட்ச ஆதார விலையை சட்டமாக்க வேண்டும். பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது. இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  தில்லி விவசாயிகள் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் விஜு. கிருஷ்ணனிடம், விவசாயிகள் சங்க சந்தா ரூ.15 ஆயிரம் வழங்கப்பட்டது. முன்னதாக, கட்சியின் அரசியல் தலைமைக் குழு பொறுப்பேற்று முதல்முறையாக செங்கிப்பட்டி வருகையையொட்டி, விஜு.கிருஷ்ணனுக்கு கட்சி தோழர்கள் சிறப்பான வரவேற்பளித்தனர்.