கள்ளக்குறிச்சி,ஏப்.15- கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே கார் டயர் வெடித்து விபத்துக் குள்ளானதில் சாராட்சியர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கள்ளக்குறிச்சி மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட தனித் துணை ஆட்சியர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வ தற்காக சென்று கொண்டி ருந்த போது இந்த விபத்து ஏற்பட்டது. மேலும் கார் தாறுமாறாக ஓடி அருகே நின்றிருந்த சிலர் மீது மோதி யதில் 11 வயது சிறுமியும் பலியானார். கள்ளக்குறிச்சி மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட தனித் துணை ஆட்சியராக பணி புரிந்து வருபவர் ராஜாமணி (52), இவர் கள்ளக்குறிச்சி யில் உள்ள தனது வீட்டி லிருந்து திருக்கோவிலூர் அருகே உள்ள ஆதி திருவரங் கம் கோவிலுக்கு செல்வதற் காக தனது கணவர், மகன், மகள், மேலும் தனது வீட்டின் கீழ் தளத்தில் குடியிருக்கும் பெண் ஒருவர் உள்ளிட்ட 5 பேரும் காரில் சென்று கொண் டிருந்தனர்.
காரை பாரூக் என்பவர் ஓட்டிச் சென்றார். சங்கராபுரம் வட்டாட்சி யர் அலுவலகம் அருகில் மயிலம் பாறை என்ற பகுதி யில் இவர்கள் சென்ற காரின் முன்பக்க டயர் திடீரென வெடித்து. இதனால் கார் தாறுமாறாக ஓடி அருகில் உள்ள மின்கம்பத்தில் மீது மோதி, நிழற்குடை அருகே நின்றிருந்த மேலும் 3 பேர் மீது மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ராஜாமணி பலியானார். மேலும் காரில் பயணம் செய்த ஓட்டுநரும் சார் ஆட்சியர் குடும்பத்தினர் அனை வரும் காயமடைந்தனர். மேலும் கார் நிழற்குடை அருகே நின்றிருந்த 3 பேர் மீது மோதியதில் அந்த 3 பேரும் காயமடைந்தனர். இதில் படுகாயமடைந்த அனைவரும் சங்காரபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக் கப்பட்டனர். அதில் சங்கரா புரத்தை சேர்ந்த கோவிந்த ராஜ் என்பவருடைய மகள் கோபிகா (11) சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து சங்கரா புரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற னர்.