tamilnadu

img

ஜெயின் இரிகேஷன் தொழிலாளர் உள்ளிருப்பு போராட்டம்!

திருப்பூர், டிச. 31 - ஜெயின் இரிகேஷன் எனும் நிறு வனம் மகாராஷ்டிர மாநிலம் ஜல்கானை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. ஆண்டு க்கு ரூ.9 ஆயிரம் கோடி விற்று  வரவு கொண்டு உலகின் பல்வேறு  நாடுகளுடன் விவசாய விளைபொரு ட்கள் சார்ந்த வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது.  உடுமலைபேட்டை அருகே எலய முத்தூரில் 900 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்நிறுவன தொழிற்சாலையில் மாம்பழக் கூழ் தயாரிக்கப்படுகிறது. இங்கிருந்து கோகோ கோலா நிறுவனத்துக்கு மாம்பழக் கூழ் அனுப்பப்படுவதாக தொழிலாளர்கள் கூறுகின்றனர். கடந்த 2006 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இத்தொழிற்சாலை யில் அலுவலர்கள் உள்பட 70 பேர்  பணியாற்றுகின்றனர். 150 பெண்கள் ஒப்பந்த அடிப்படையில் இங்கு விவ சாயப் பணியில் ஈடுபட்டு வரு கின்றனர்.

பல்வேறு பாரபட்சம், உரிமை மீறலைத் தொடர்ந்து கடந்த 2018ஆம் ஆண்டு இங்கு பணியாற்றும் தொழி லாளர்கள் 34 பேர் சிஐடியு சங்கத்தில் சேர்ந்தனர். கொரோனா காலத்தில் உற்பத்தி பாதிக்கப்பட்ட நிலையில் பின்னர் இந்நிறுவனம் சீர்பட  தொடங்கியது. இந்நிலையில் சிஐ டியு சங்கத்தில் உள்ள 29 பேரை  மறு பணி ஒதுக்கீடு (ரீ அலக்கேஷன்) என்று சொல்லி நிர்வாகம் தன்னிச்சையாக, வெவ்வேறு ஊர் களுக்குத் தனித்தனியாக பணி  மாறுதல் செய்து உத்தரவிட்டுள்ளது. எந்த நியாயமான காரணமும் இல்லாமல், சங்கத்தில் இருப்பவர் களை பழி வாங்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என தொழிலாளர்கள் குற்றஞ்சாட்டி யுள்ளனர். எனவே நிர்வாக நட வடிக்கையை எதிர்த்து 29 தொழி லாளர்கள் கடந்த 27ஆம் தேதி  காலை 8 மணி முதல் ஆலைக்குள் இருந்தபடி உள்ளிருப்புப் போராட்ட த்தைத் தொடங்கியுள்ளனர். இதைத் தொடர்ந்து 29ஆம் தேதி காவல் துறையினர்,

வட்டாட்சியர்  உள்ளிட்டோர் அங்கு சென்று நிர்வா கம், தொழிலாளர்கள் என இரு தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும் இதில் சுமூகத் தீர்வு ஏற்படாத நிலையில் தொழி லாளர் போராட்டம் தொடர்ந்தது.  கடந்த ஐந்து நாட்களாக இவர்கள் வீட்டுக்குச் செல்லாமல் ஆலைக்குள்ளேயே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இரவு நேரத்தில் அங்கேயே தூங்கி வெளியே வராமலும் குடும்பத்தார், உறவினர்கள் யாரையும் சந்திக்கா மலும் போராட்டத்தை தொழி லாளர்கள் தொடர்ந்து வருகின்ற னர்.

இதற்கிடையே சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ், உடுமலை பொதுத் தொழிலாளர் சங்கச் செயலாளர் ஜெகதீசன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், திருப்பூர்  மாவட்டச் செயலாளர் செ.முத்துக் கண்ணன், உடுமலை ஒன்றியச் செய லாளர் கி.கனகராஜ் உள்ளிட்டோர் வியாழக்கிழமை அங்கு சென்று  உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடு பட்டிருக்கும் தொழிலாளர்களுடன் ஆலைக்கு வெளியே இருந்தபடி நுழைவாயில் கதவு வழியாக உரை யாடினர்.  

இந்த சம்பவத்துக்குப் பிறகு ஆலை நிர்வாகம் நுழைவாயில் கதவின் கம்பிகளை அடைத்து வெளி யாட்கள் யாரும் உள்ளே இருப்ப வர்களுடன் எந்த வகையிலும் தொடர்பு கொள்ளக் கூடாது, பேசக் கூடாது என்ற நோக்கத்தில் கறுப்பு நிற அடர்த்தியான துணியைக்கொண்டு மூடிவிட்டனர். ஏற்கெனவே அந்த  கதவின் முன்பாக ஒரு வாகனத்தை யும் நிறுத்தி வைத்து கதவை திறக்க முடியாதபடி இடையூறு ஏற்படுத்தி வைத்துள்ளனர். இந்த சம்பவத்துக்கு திருப்பூர் மாவட்ட சிஐடியு மாவட்டச் செய லாளர் கே.ரங்கராஜ் கடும் கண்ட னம் தெரிவித்துள்ளார். தொழி லாளர்களின் போராட்ட உரிமை யையும், தொழிற்சங்க உரிமையை யும் பறிக்கும் வகையில் செயல்படும்  ஜெயின் இரிகேஷன் நிர்வாகம், இந்த செயலின் மூலம் அடிப்படை மனித உரிமையையும் பறித்து, தொழிற் சாலையையே தொழிலாளர்களின் சிறைச்சாலையாக மாற்றி யுள்ளது. இத்தகைய அநாகரிக மான பழிவாங்கும் நடவடிக்கை  களைக் கைவிட்டு தொழிலாளர்களு டன் நியாயமான முறையில் பேச்சு வார்த்தை நடத்தி அவர்களது கோரிக்கையை நிறைவேற்ற முன் வர வேண்டும் என்று கே.ரங்கராஜ் வலியுறுத்தி உள்ளார்.