tamilnadu

முகக் கவசம்: ரூ.500 அபராதம்!

சென்னை,ஜன.13-    சென்னையில் ஏற்கனவே ரெயில் நிலையங்களில் முக கவசம்  அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. சென்னையில் கொரோனா வேகமாக பரவுவதை தடுக்க தமிழக  அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சென்னையில் தற்போது பொது இடங்களில் முக கவசம் அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டு வரு கிறது. காவல்துறையினர் சோதனை நடத்தி அபராதம் விதித்து வருகின்ற னர். இந்த நிலையில் கொரோனா கட்டுப்பாடுகளை தமிழக அரசு மேலும் அதிகரித்துள்ளது. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முக கவ சம் அணியாமல் செல்லும் பொது மக்களுக்கு அபராதத் தொகை யினை ரூ.200-ல் இருந்து ரூ.500 ஆக உயர்த்தி தமிழக அரசு அறி வித்துள்ளது. முக கவசம் அணிப வர்கள் வாய் மற்றும் மூக்கை  நன்கு மூடுமாறும் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதற்கான உத்தரவை சுகா தாரத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் பிறப்பித்துள்ளார். இதையடுத்து காவல்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளனர். கொரோ னாவை தடுக்க பொது மக்கள் கண்டி ப்பாக முக கவசம் அணிந்து வெளியே வருமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளது. சென்னையில் ஏற்கனவே ரெயில் நிலையங்களில் முக கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500  அபராதம் விதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.