சென்னை,மார்ச் 19- தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு: ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2017-18 ஆம் ஆண்டுக்குரிய அரசுப் பல்தொழில் நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் காலிப்பணியிடங்க ளுக்கு நேரடி நியமனத்திற்கான பணித் தெரிவு சார்ந்து அறிவிக்கை 27.11.2019 அன்று வெளியிடப்பட்டது. தற்போது விண்ணப்பதாரர்களின் கூடுதல்கல்வித் தகுதிகள், பணி அனுபவச் சான்றிதழ், நன்னடத்தை சான்றிதழ் மற்றும் பிற சான்றிதழ்களை ஆன்லைன் வாயிலாக கூடுதலாகப் பதிவேற்றம் செய்வதற்கு அறிவிப்பு வெளி யிடப்பட்டு (11.03.2022 முதல் 18.03.2022 வரை) ஆவ ணங்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பணி அனுப வச் சான்றிதழ் மற்றும் பிற சான்றிதழ்களை பதிவேற்றம் செய்திட கூடுதல் கால அவகாசம் கோரி விண்ணப்பதாரர்க ளிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டு வருகின்றன. எனவே, விண்ணப்பதாரர்களின் கோரிக்கைகளை ஏற்று ஆவணங்களை பதிவேற்றம் செய்வதற்கு கால அவகாசம் மார்ச் 18 இல் இருந்து 25 ஆம் தேதியாக நீட்டிக்கப்படுகிறது என அறிவிக்கப்படுகிறது. மேலும், விண்ணப்பதாரர்களிடம் இருந்து பெறப்படும் கோரிக்கைகள் பரிசீலனை செய்யப்பட்டு வரு கின்றன. கோரிக்கைகளுக்கான உரிய பதில் விண்ணப்ப தாரர்களுக்கு தெரிவிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.