tamilnadu

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை ஆணையத்தின் பதவிக்காலம் நீட்டிப்பு

சென்னை,பிப்.23- மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்திய தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட் டம் நடத்திய மக்கள் மீது அதிமுக அரசின்  காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர்.  இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடா்பாக விசாரணை நடத்துவதற்காக, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபா் ஆணையம் கடந்த அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்டது.  தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து இதுவரை 1426 பேருக்கு சம்மன் அனுப்பி, 1,048 பேரிடம் அருணா ஜெக தீசன் ஆணையம் விசாரணை நடத்தி யுள்ளது. இதுவரை 36 கட்டமாக பல்வேறு நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆணையத்தின் விசாரணைக்கான பதவிக்காலம் பிப்ரவரி 22 அன்றுடன் முடிவடைந்தது. இந்த நிலையில் அருணா ஜெகதீசன் ஆணையத்தின் பதவிக்காலம் மேலும் 3 மாதங்களுக்கு (மே 25 வரை) நீட்டிக்கப் படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசா ணையில், அருணா ஜெகதீசன் ஆணை யத்தின் பதவிக்காலம் பிப்ரவரி 23.02.2022 முதல் 22.05.2022 நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையத்தின் இடைக்கால விசாரணை அறிக்கை கடந்த ஆண்டு மே 14 ஆம் தேதி முதலமைச்சரிடம் தாக்கல் செய்யப்பட்டது.