tamilnadu

உபரி பேராசிரியர்கள் பணிக்காலம் நீட்டிப்பு

சென்னை, மார்ச் 27- அண்ணாமலை பல்கலைக் க்கழகத்தின் உபரி பேராசிரி யர்களின் பணி காலத்தை மேலும் 3 ஆண்டுகள் நீட்டித்து உயர்கல்வி த்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. நிதி நிலை சரியில்லாததால், 370 பேரை மீண்டும் திரும்பப் பெற முடியாது என்று உயர்கல்வித் துறைக்கு, அண்ணாமலை பல்க லைக்கழகம் கடிதம் எழுதியிருந்தது. இந்நிலையில், கல்லூரிக் கல்வி இயக்குநரகத்துக்கு உயர்கல்வி த்துறை செயலாளர் கார்த்திகேயன் எழுதியுள்ள கடிதத்தில், ஏற்கனவே 4 ஆண்டுகால பிரதிநிதித்துவம் வழங்கப்பட்ட 370 பேராசிரியர்கள் பிற உயர்கல்வி நிறுவனங்களில் பணியாற்றி வருவதாக தெரிவித்துள்ளார். பிற அரசு கலை,அறிவியல் கல்லூரிகளுக்கு மாற்றப்பட்ட அண்ணாமலை பல்கலைக்கழக த்தின் 370 உபரி பேராசிரியர்களுக்கு மேலும் 3 ஆண்டுகாலம் பணி நீட்டிப்பு செய்யப்படுவதாக அறிவித் துள்ளார். 370 பேரும் தற்போது பணி யாற்றி வரும் பிற கல்லூரிகளிலேயே அடுத்த 3 ஆண்டு காலத்துக்கும் பணியாற்றிட வேண்டும் என உத்த ரவிட்டுள்ள உயர்கல்வித்துறை செயலாளர், அதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கல்லூரிக் கல்வி இயக்குநரகத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.