tamilnadu

பாஜகவின் மதவெறி அரசியலை அம்பலப்படுத்துங்கள்: முதல்வர் அழைப்பு

சென்னை, ஜன. 30- அமைதியான தமிழ்நாட்டில் மதவெறியை விதைத்து கலவரத்தை தூண்டிவிட்டு பாரதிய ஜனதா குளிர்கா ய நினைப்பதாகவும், அக்கட்சியின் அரசி யலை அம்பலப்படுத்துங்கள் எனவும் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், நல்லாட்சியின் நற்பெயரை சிதைத்திட பொய்யை மட்டுமே சொல்லிவரும் அதிமுகவால் கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாடு பட்ட பாட்டை மக்களிடம் நினைவுப்படுத்த அறிவுறுத்தியுள்ளார். மேலும்  நல்லிணக்கமாக வாழ்ந்துவரும் தமிழ்நாட்டு மக்களின் மனதில் மதவெறியை விதைத்து, கலவ ரத்தை தூண்டிவிட்டு குளிர்காய அவசரம் காட்டும் பாஜகவின் சீரழிவு அரசியலை அம்பலப்படுத்துங்கள் எனவும்குறிப்பிட்டுள்ளார். மக்கள் நலனுக்குஎதிரான இரு கட்சிகளும்கூட்டணி அமைத்து தமிழ்நாட்டை பாழ்ப்படுத்த நினைப் ்பதை மக்களிடம் எடுத்துக்கூறுங்கள் எனவும், மதவாத அரசியலுக்கு ஒருபோதும் இடமளிக்காத தமிழக மக்களின் தனித்தன்மையை நினைவு படுத்துங்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். திமுக மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை என்றென்றும் தொடரும் வகையில் களப்பணியாற்றுங்கள் எனவும் தொண்டர்களுக்கு அவர் வலியுறுத்தியுள்ளார்.