tamilnadu

img

காரியாபட்டி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து 3 தொழிலாளர்கள் பலி : 4 பேர் படுகாயம்

காரியாபட்டி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து

 3 தொழிலாளர்கள் பலி : 4 பேர் படுகாயம்

காரியாபட்டி, ஜூன் 11 - விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே வடகரையில் தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 4 பேர் படுகாயமடைந்தனர்.  காரியாபட்டி அருகேயுள்ளது வடகரை கிராமம். இங்கு தனியாருக்கு சொந்தமான யுவராஜ் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. நாக்பூர் உரிமம் பெற்ற இந்த ஆலையில் சுமார் 200 தொழி லாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் வழக்கம் போல தொழி லாளர்கள் புதன்கிழமை காலை பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.    அப்போது, பட்டாசுக்கான வேதிப் பொருட்களில் ஏற்பட்ட உராய்வு காரண மாக திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அந்த அறை முழுவதும் இடிந்து தரை மட்டமானது.  2 பேர் பலி : இந்த விபத்தில் தண்டிய னேந்தல் கிராமத்தைச் சேர்ந்த அய்யணன் என்பவரது மகன்  கருப்பையா (37), கல்குறிச்சியைச் சேர்ந்த இரவி என்பவ ரது மனைவி சவுண்டம்மாள் (54) ஆகி யோர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காரியா பட்டியைச் சேர்ந்த கணேசன் (55) மருத்துவமனையில் உயிரிழந்தார்.   மேலும் முருகன் (40), மாரியம்மாள் (40) மற்றும் பேச்சியம்மாள் (38) ஆகிய 3 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவலறிந்து விரைந்து வந்த காரியா பட்டி தீயணைப்புத்துறையினர், பிற அறைகளுக்கு தீயினைப் பரவ விடாமல் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். மேலும், காயம் அடைந்தவர்களை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.   விபத்து நடைபெற்ற ஆலையில் அருப்புக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் தலைமை யிலான போலீசார் ஆய்வு செய்தனர். மேலும் இந்த விபத்து குறித்து காரியா பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  சிஐடியு ஆறுதல் : பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த மற்றும் காய மடைந்த தொழிலாளர்களின் குடும்பத்தின ரை சந்தித்து சிஐடியு - பட்டாசு தீப்பெட்டி தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செய லாளர் எம்.சி. பாண்டியன், காரியாபட்டி சிஐடியு தலைவர் முகமது அலி ஜின்னா ஆகியோர் நேரில் ஆறுதல் கூறினர். முதல்வர் ரூ. 4 லட்சம் நிவாரணம் அறிவிப்பு பட்டாசு விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இந்த விபத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தி னருக்கு தலா 4 லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாயும், லேசான காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார்.