சென்னை, நவ. 21- மெட்ராஸ் ஐ டிசம்பர் 2ஆவது வாரத்தில் குறைந்துவிடும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மெட்ராஸ் ஐ தொற்று பரவல் அதிகமாக பரவி வரும் நிலையில் சென்னை எழும்பூர் கண் மருத்துவ மனையில் மெட்ராஸ் ஐ வைரசினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை பார்வையிட்டு அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். பின்னர் அமைச்சர் செய்தியா ளர்களிடம் கூறுகையில், 1918ஆம் ஆண்டு முதல்முறையாக இத் தொற்று சென்னையில் கண்டறி யப்பட்டதால் இதற்கு “மெட்ராஸ்-ஐ” என்று பெயரிடப்பட்டது. கண் இமைகளில் அடினோ வைரஸ் வகை 8 அல்லது 19 நுண்ணுயிரியினால் ஏற்படும் தொற்று ஆகும். இது கண்ணின் முன் பகுதியான வெள்ளைப் படலத்தில் வைரஸ் கிருமியால் ஏற்படும் ஒரு கண்நோய். இது ஒரு தொற்று வியாதி, பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து மற்றவருக்கு எளிதாக பரவக்கூடிய தன்மை வாய்ந்த நோய். இந்த வைரஸ் கிருமியானது எப்போதும் எல்லா இடங்களிலும் இருக்கும். மழைக் காலங்களில் காற்றில் ஈரப்பதம் அதிகரிக்கும்போது தும்மல் மூலமாகவோ அல்லது கைகளால் கண்களை தொடும்பொழுதோ இத்தொற்று பரவுகிறது.
இத்தொற்று ஏற்பட்டால் இமை களுக்கு குளிர் ஒத்திரம் மற்றும் கொதித்து ஆறவைத்த சுத்தமான குடிநீரில் முகம், கண்களை அடிக்கடி கழுவவேண்டும். மேலும் வைட்ட மின் சத்து உள்ள பழங்கள் உட் கொண்டு, அதிக வெளிச்சத்தில் செல்லாமல் ஓய்வு எடுத்தால் போதும். மருத்துவரின் ஆலோசனை இல்லா மல் எந்த மருந்தும் போடவேண் டாம். எல்லா அரசு மருத்துவமனை களிலும் இதற்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது. இத்தொற்று ஏற்பட்டால் கண்களில் கைகளை வைக்காமலும், நீங்கள் பயன்படுத் தும் துண்டு, கைக்குட்டை, படுக்கை விரிப்புகளை தனிமைப்படுத்தியும், கண் கண்ணாடியை அணிந்தும் மற்ற வர்களுக்கு பரவாமல் தடுக்கலாம். மேலும் பள்ளி கல்லூரி அலுவலகம் மற்றும் மக்கள் கூடும் பொது இடங்க ளுக்கு செல்வதை தவிர்க்கவும்.
பொதுவாக செப்டம்பர் தொடங்கி டிசம்பர் முதல் வாரம் வரை மெட் ராஸ் ஐ பரவல் இருக்கும். இந்த ஆண்டும் தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் வடகிழக்கு பரு வமழை தொடங்கிய நாளிலிருந்து செப்டம்பர் முதல் வாரத்தில் இருந்து மெட்ராஸ் ஐ பாதிப்பு கூடுதலாகி வருகிறது. தமிழகம் முழுவதும் தினசரி மெட்ராஸ் ஐ பாதிக்கப்பட்டு 4,000 முதல் 4,500 பேர் சிகிச்சைக்கு வருகிறார்கள். டிசம்பர் முதல் வாரம் வரை மெட்ராஸ் ஐ பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. அதன் பிறகு இந்த நோய் பாதிப்பு நீங்கிவிடும். இந்த நோய் சிகிச்சைக் கான கண் சொட்டு மருந்து போது மான அளவு இருப்பில் உள்ளது. இது எந்த விதமான வைரஸ் கிருமி என்று தெரிந்து கொள்ள கண்ணீரை பயன்படுத்தி நுண் கிருமி பரிசோ தனை அரசு கிண்டி கிங் நிலை யத்தில் மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. மொத்தம் 66 மாதிரிகளை பரிசோ தனை செய்ததில் 56 மாதிரிகளில் அடினோ வைரஸ் மற்றும் எண்டிரோ வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். பிரியா மரணம் தொடர்பான கேள் விக்கு, மருத்துவர்களின் சிகிச்சை யில் எந்த குறைவும் இல்லை. மருத்துவரின் கவனக்குறைவு தான் காரணம். மருத்துவர்களின் பெயரில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் கொலை குற்ற மாக்கக் கூடாது என்று மருத்துவர் களே தெரிவிக்கிறார்கள். 23ஆம் தேதி நடைபெறும் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு அறுவை சிகிச்சை நிபுணர்கள் பின்பற்ற வேண்டிய புதிய வழிகாட்டு நெறிமுறைகள் அன்றே வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.