அப்பாவிகளை கைது செய்யாதீர்! - தமிழக அரசுக்கு சிபிஎம் வலியுறுத்தல்
கள்ளக்குறிச்சி, ஜூலை 27- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தமிழ்நாடு மாநில செயலா ளர் கே. பாலகிருஷ்ணன், மாநி லக்குழு உறுப்பினர் ஆர். பத்ரி, வழக்கறிஞர் கேசவன், கள்ளக் குறிச்சி மாவட்ட செயலாளர் டி.எம். ஜெய்சங்கர், கடலூர் மாவட்ட செய லாளர் கோ. மாதவன் மற்றும் கட்சி யின் விழுப்புரம், கடலூர், கள்ளக் குறிச்சி ஆகிய மாவட்ட தலை வர்கள் , உயிரிழந்த ஸ்ரீமதியின் பெற் றோரையும் அவரது தரப்பு வழக்கறி ஞர்களையும், அப்பகுதி மக்களை யும் ஜூலை 27 புதனன்று நேரடியாக சந்தித்து நிலைமைகள் மற்றும் விபரங்களை கேட்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து இப்பிரச்ச னையில் அடுத்த கட்டமாக தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கள்ளக்குறிச்சி யில் பத்திரிகையாளர்கள் சந்திப் பின் போது கோரிக்கைவிடுத்தார். அச்சந்திப்பின் போது கொடுக்கப் பட்ட அறிக்கை வருமாறு:
கள்ளக்குறிச்சி சக்தி மெட்ரிகு லேசன் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த 13.7.2022 அன்று மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார். இதுபற்றி சம்பந்தப்பட்ட பெற்றோர், மற்றவர்களிடம் விசாரித்த போது பல சந்தேகங்களும், கேள்விகளும் எழுகின்றன. மாணவி மரணம் குறித்து 13.7.2022 அன்று காலை 6.30 மணிக்கு அவருடைய தாயாருக்கு தகவல் வந்துள்ளது. தாயாரும் மற்ற உறவினர்களும் சம்பவ நடந்த பள்ளிக்கு வருவதற்கு முன்பே, பள்ளி நிர்வாகம், ஸ்ரீமதி யின் உடலை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் பிணவறை யில் வைத்துள்ளனர். பெற்றோர் மற்றும் உறவினர்களை பள்ளியில் உள்ள மற்றவர்களையும், சக மாணவிகளையும் சந்திக்க அனுமதி மறுத்து விட்டனர். மாடியிலிருந்து குதித்ததாக கூறப்படும் சம்பந்தப்பட்ட இடத்தையும் காட்ட மறுத்துள்ளனர்
இம்மரணம் குறித்து பொது மக்களும், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல அரசி யல் கட்சிகளும் கள்ளக்குறிச்சி யில் மறியல் உள்ளிட்ட போராட்டங் களை நடத்திய பிறகு 2022 ஜூலை 14 அன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அந்த கூராய்வு அறிக்கையில் அவரது மூக்கு, வலது தோள்பட்டை, வலது கரம் உள்ளிட்ட இடங்களில் ரத்தக்காயம் உள்ளதாக குறிப்பிடப்பட்டிருக் கிறது. அவரது ஆடைகளிலும் ரத்தக் கறைகள் இருந்துள்ளன. மேலும் வலதுபுற நெஞ்சுப் பகுதி, மார்பகம் ஆகிய பகுதிகளில் ஆழமான காயங்களும் இருந்துள்ளன. இத்து டன் வலதுபுறம் உள்ள மார்பக எலும்புகூட்டில் பெரும்பாலான எலும்புகள் முறிந்து உள்ளதாகவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அப்பள்ளியில் சி.சி.டி.வி. கேமி ராக்கள் பொருத்தப்பட்டும் அது வேலை செய்யவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவி அணிந்திருந்த நகை அறுக்கப் பட்டுள்ளதாகவும் தெரிகிறது. மேற்கண்டவைகளை சீர்தூக்கி பார்க்கும் போது மாணவியின் மர ணம் தற்கொலை யாகவோ, 3வது மாடியிலிருந்து குதித்து இறந்துள்ள தாகவோ முடிவுக்கு வர முடிய வில்லை. அம்மரணத்தில் பல மர்மங் கள் இருப்பதாகவும், மாணவி பாலி யல் வன்முறைக்கு உட்படுத்தப் பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுவாக எழுகிறது. 2022 ஜூலை 14 அன்று இத்தகைய தெளிவான பிரேத பரிசோதனை அறிக்கை கிடைக்கப்பெற்ற பின்னரும் கூட, காவல்துறையினர் உரிய கோணத்தில் தனது விசார ணையை தொடராமலும், பள்ளி யின் தாளாளர் உள்ளிட்ட இதர நிர்வாகத்தினரை கைது செய்யா மலும் இருந்ததானது மாணவியின் மரணத்திற்கான காரணத்தை மறைப்பதற்கும், குற்றவாளிகளை காப்பாற்றுவதற்கும் மேற்கொள்ள ப்பட்ட நடவடிக்கையாகவே கருத வேண்டியுள்ளது.
மரணமடைந்த ஸ்ரீமதியின் முதல் பிரேதப் பரிசோதனை ஜூலை 14 ஆம் தேதி நடைபெற்றது. தங்கள் தரப்பு வழக்கறிஞர் மற்றும் மருத்து வர் முன்னிலையில் இரண்டாவது பிரேதப் பரிசோதனையை நடத்த வேண்டும் என்று கோரி ஸ்ரீமதியின் பெற்றோர் நீதிமன்றத்தை நாடு கின்றனர். நீதிமன்றம் அந்த கோரிக்கையை உரிய முறையில் ஏற்றுக்கொள்ளாமல், தவிர்த்து விடுகிறது. இதன்பின்னர் ஸ்ரீமதியின் பெற்றோர் உச்சநீதிமன்றத்தை நாடி, உத்தரவு வரும் வரை பிரேதப் பரிசோதனை நடத்தக்கூடாது என்ற கோரிக்கையை முன்வைக் கின்றனர். ஆனால் கடைசி நேரத்தில் பிரேதப் பரிசோதனை செய்வதற்கான அனைத்து ஏற்பாடு களையும் செய்துவிட்டு, 15 நிமிடத் திற்கு முன்புதான் ஸ்ரீமதியின் பெற் றோருக்கும் அவர்களது வழக்கறி ஞருக்கும் தகவல் தரப்படுகிறது. நீதி மன்றத்தை மட்டுமே நாடியிருக்கக் கூடிய ஸ்ரீமதியின் பெற்றோருக்கு நீதி மன்றத்தால் உரிய நீதி வழங்கப்பட வில்லை என்பது இதன்மூலம் உறுதி யாகிறது. ஏற்கெனவே மாவட்ட நிர்வாக மும் மாவட்ட காவல்துறையும் ஒரு தலைப்பட்சமாக நடந்துகொண்டி ருக்கக்கூடிய சூழ்நிலையில், நீதி மன்றமும் இத்தகைய அணுகுமுறை யை கடைப்பிடிப்பது பெற்றோ ருக்கு நம்பிக்கையின்மையை உரு வாக்குவதாக உள்ளது.எனவே மாணவி ஸ்ரீமதியின் மரணத்திற்கு நீதி கிடைப்பதற்கான வகையில் நீதி மன்றம் உரிய அணுகுமுறையை கையாள வேண்டும் என்று கேட் டுக்கொள்கிறோம்.
பாரபட்சமின்றி சிபிசிஐடி விசாரணை நடத்துக!
தற்போது, இவ்வழக்கு சிபி சிஐடி விசாரணைக்கு ஒப்படைக் கப்பட்டுள்ளது. சிபிசிஐடி நடத்திய விசாரணையில் தாளாளர் மற்றும் பள்ளி நிர்வாகிகள் கைது செய் யப்பட்டுள்ளனர். மேலும் சிபிசிஐடி பாரபட்சமின்றி முழுமையான புலன் விசாரணை மேற்கொண்டு மாணவி யின் மரணத்திற்கு உண்மையான காரணத்தையும், அதில் சம்பந்தப் பட்டுள்ள குற்றவாளிகளையும் தாம தமின்றி கைது செய்ய வேண்டும். இவ்வழக்கு விசாரணை தொடர்ச்சி யாக நடத்தப்பட்டு குற்றவாளி களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தருகிற அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென வற்பு றுத்துகிறோம். விசாரணையை நான்கு நாட்கள் தாமதப்படுத்திய மாவட்ட காவல்துறை கண்காணிப் பாளர், மாவட்ட ஆட்சியாளர் உள்ளிட்ட அதிகாரிகளையும் விசா ரணை வளையத்திற்குள் கொண்டு வர வேண்டும். இந்த விசாரணையில் தீவிரம் காட்டுவதற்கு மாறாக, காவல்துறை பள்ளியில் நடைபெற்ற வன் முறைச் சம்பவங்கள் குறித்த விசா ரணையை தீவிரப்படுத்தியுள்ள தாகவே தெரிகிறது. இது சரியல்ல என்பதை சுட்டிக்காட்ட விரும்புகி றோம். மாணவியை பறிகொடுத்து தவித்துக் கொண்டிருக்கிற பெற் றோருக்கு மற்றும் பள்ளியில் இது போன்ற சம்பவங்கள் தொடர் கதை யானால் பள்ளிக்கு அனுப்பும் மாண விகளுக்கு பாதுகாப்பு இருக்காது என்ற கவலையும், அச்சமும் உள்ள பெற்றோர்களுக்கு நம்பிக்கை அளிக் கும் வகையில் மாணவியின் மரணம் குறித்த விசாரணையை தீவிரப்படுத் திட வேண்டும். இவ்வழக்கில் மெத் தனமாக இருந்த அனைத்து அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையி னரை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும்.
தடயங்களை அழிக்க வன்முறையா?
மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் நான்கு நாட்கள் தாம தப்படுத்தியதன் விளைவாக பொது மக்கள் மத்தியில் ஆத்திரத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழ்நிலையில் 17.7.2022 அன்று பள்ளியில் வன்முறை சம்பவம் நடந்துள்ளது குறித்த உண்மை யான காரணத்தை முழுமையான புலன் விசாரணை மூலம் காவல் துறை உறுதி செய்ய வேண்டும். ஏற்பட்ட வன்முறை சம்பவமும் கூட மாணவியின் மரணத்திற்கான தட யங்களை அழிக்கும் நோக்கோடு நடைபெற்றுள்ளதா என்பதையும் காவல்துறை விசாரித்து உறுதி செய்ய வேண்டும். எது எப்படி இருந்த போதிலும் பள்ளியில் நடந்த வன் முறை ஏற்புடையதல்ல. இதற்கு பொறுப்பானவர்கள் கைது செய்யப் பட வேண்டும். ஆனால் அதே சம யம், இச்சம்பவத்தை காரணம் காட்டி அப்பாவிகளையும், சம்பந்தமில் லாத மாணவர்களையும் கைது செய் கிற நடவடிக்கைகளை காவல்துறை மேற்கொள்ளக் கூடாது. மேலும் கைது செய்யப்பட் டுள்ள பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் மாணவர்களின் எதிர் காலத்தை கணக்கில் கொண்டு அவர்களை விடுதலை செய்வது டன், அவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளையும் திரும்பப்பெற வேண்டும். உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ. 50 லட்சம் நிவாரணமும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கிட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
ஆக.5 கண்டன ஆர்ப்பாட்டம் கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஆகஸ்ட் 5, 2022 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டுக!
இப்பள்ளியில் பயின்றுவரும் 3500க்கும் மேற்பட்ட மாணவர் களின் கல்வியை தொடர்வதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டும். மேலும் பள்ளியில் இருந்த மாணவ - மாணவியர்கள், ஆசிரியர்களின் அனைத்து சான்றிதழ்களும் எரிந்து விட்ட நிலையில், மாணவர்களுக்கு பிறப்பு சான்றிதழ், மதிப்பெண் பட்டியல் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும், ஆசிரியர்களின் சான்றிதழ்களும் விரைந்து கிடைக்க உரிய நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட வேண்டும். மேலும், அப்பகுதியில் தற்போது நீடித்து வரும் பதற்றத்தை தணிப்பதற்கு அனைத்துக் கட்சி கூட்டத்தினை கூட்டிடவும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.