tamilnadu

img

505-இல் 208 வாக்குறுதிகள் நிறைவேற்றம் சட்டப்பேரவையில் அதிமுகவுக்கு முதல்வர் பதில்

சென்னை,மார்ச் 23- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின்போது மக்களுக்கு அளித்த 505 வாக்குறுதிகளில், 208  வாக்குறுதிகளை நிறைவேற்றப்பட்டு வருகின்றன என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப் பேரவையில் 2022-23 பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வரு கிறது. மூன்றாவது நாளான மார்ச் 23 புதன்கிழமை, திமுக தேர்தல் வாக்குறுதிகள் குறித்தும், அரசு நிறைவேற்றி வரும் திட்டங் கள் குறித்தும் விதி 110-ன்கீழ் தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

வெள்ளை அறிக்கையாக...

அப்போது, முதல் தனது உரையில், “சட்டமன்றத்திலும், பொது வெளியிலும் திமுக தேர்தல் வாக்குறுதிகள் குறித்தும், அவற்றை இந்த அரசு நிறைவேற்றி வருவது குறித்தும் சில கருத்துகளும், விமர்சனங்க ளும் எதிர்க்கட்சியால் முன்வைக்கப்பட்டு வருகிறது.  அது குறித்து சட்டமன்ற உறுப் பினர்களுக்கும், பொது மக்களுக்கும்  உண்மை நிலையை விளக்கும் வகையில், வெள்ளை அறிக்கைக்குச் சமமான, ஓர் அறிக்கையை வெளியிடுவதாக கூறினார். திமுக ஆட்சிக்கு வந்து பத்து மாதங்கள் நிறைவு பெற்றுள்ளது. தேர்தல் அறிக்கை தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை குறிப்பிட்ட காலவரையறைக்குள் நிறை வேற்றுவதற்கும், மாநிலப் பொருளா தாரத்தை மீட்பதற்கும், துறைவாரியான முன்னேற்றத்திற்கும், ஏற்ற வகையில் தயாரிக் கப்பட்ட அறிக்கையாகும். இந்த அறிக்கை யில் கொடுக்கப்பட்டுள்ள 505 வாக்குறுதி களும் நிறைவேற்றப்படும். அதில் சொல்லப் படாத நலத் திட்டங்களும் செயல்படுத்தப் படும் என்ற நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்புடன் மக்கள் அளித்த மாபெரும் வெற்றியைப் பெற்று அமைந்துள்ள இந்த அரசு, அதனை நிறைவேற்ற உறுதியுடன் செயல் பட்டு வருகிறது” என்றும் முதல்வர் கூறி னார்.

தமிழக மக்களின் நம்பிக்கையை உறுதி  செய்யும் விதமாக, கடந்த மே 7 ஆம்  தேதியன்று பதவியேற்றதும் கோடிக் கணக்கான மக்கள் பயன்பெறும் வகையில்  2.09 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரூ.4,000 கொரோனா நிவாரண நிதி, ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைப்பு,  மகளிருக்கு அரசு நகரப்  பேருந்துகளில் இலவசப் பயணம் உள்ளிட்ட  ஐந்து முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டு அரசாணைகளை வெளியிடப்பட்டதையும் அதன்பிறகு கடந்த பத்து மாதங்களில் வெளியிடப்பட்ட பல்வேறு அறிவிப்புகள், தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற அறி விப்புகளையும் நிறைவேற்றி மக்களின் சமூகப் பொருளாதாரம் முன்னேற வழி வகை  செய்திருப்பதையும் முதலமைச்சர் பட்டியலிட்டார். தொடர்ந்து பேசிய முதலமைச்சர் இது எனது அரசு அல்ல. நமது அரசு. ஆனால், தேர்தல் வாக்குறுதிகளை தொடர்ந்து நிறை வேற்றி வரும் வேளையில் “பத்து மாதக் குழந்தையிடம் பத்தாம் வகுப்பு மதிப்பெண் என்ன” என்று கேட்பது போல் இருக்கிறது எதிர்க் கட்சி உறுப்பினர்கள் கேட்பது. “இந்த  குழந்தை பத்தாம் வகுப்பில் முதல் மதிப்பெண்  பெறுவது மட்டுமல்ல பட்டப் படிப்பிலும் பதக்கம் வெல்லும்” என்றும் சட்டமன்றத் தேர்தலின் போது மக்களுக்கு அளித்த 505 வாக்குறுதி களில், 208 வாக்குறுதிகளை நிறை வேற்ற பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட் டுள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.