tamilnadu

img

காசிக்குப் போனாலும் கருமம் தொலையாது!

[“காசிக்குப் போனாலும் கருமம் தொலையாது..” இப்பழமொழியை அறிவோம்.  அந்தப் “பழமொழிக்கதை” அறிவீர்களா? “காக்கைச் சிறகினிலே” ஏப்ரல் 2023 மாத இதழில் ஆ.சிவசுப்பிரமணியம் எழுதியுள்ள “ஆசாரம் குறித்த ஒரு பகடிக் கதை” கட்டுரையில் இடம் பெற்றுள்ள தி.வள்ளியம்மாள் சொன்ன கதை. என் மொழியில் சுருக்கப்பட்ட வடிவத்தில் கீழே! காசி என்பது வாரணாசி. மோடி தொகுதி என்பது தகவலுக்காக மட்டுமே…] ஒரு ஊரிலே ஒரு ஆச்சாரக்காரன் இருந்தா னாம். ஒரு திருமண விருந்தில் சாப்பிடும் போது எதிர் பந்தியில் இருந்தவன் மொச்சைக் கொட்டையை நசுக்கும் போது அது நேரடியாக இந்த ஆச்சாரக் காரன் வாயில் விழுந்து குடலுக்குப் போய்விட்டது. அடுத்தவன் எச்சிலை சாப்பிட்ட பாவம் கழுவ காசிக்கு நடை பயணம் போனானாம். அப்போதெல் லாம் இப்படிக்கு காசிக்கு போவோருக்கு வழி யெல்லாம் வீடுகளில் ஓசி சாப்பாடு கிடைக்கும். இந்த ஆச்சாரக்காரன் ஒரு வீட்டில் விருந்து சாப்பிட்டுவிட்டு எச்சில் இலையை தூக்கிப் போடப் போனானாம். “ஐயையோ! போட்டுராதீங்க கழுவி வச்சா இன்னும் சிலருக்கு பயன்படும். இதுக்கு முன்ன ஒருத்தரு கழுவி வச்சதாலத்தான் உங் களுக்கு கிடைச்சுது..” ன்னு விருந்து கொடுத்தவர் சொல்ல ஆச்சாரக்காரன் அதிர்ச்சி ஆனான். சரி! இந்த பாவத்தையும் சேர்த்தே காசியில் முழுகலாம்னு யாத்திரையைத் தொடர்ந்தான். மறுநாள் பசித்தது. ரொம்ப ஜாக்கிரதையா மண் சட்டியில சாப்பாடு தாங்கண்ணு கேட்டிருக்கான். அவங்களும் சமையலுக்கு பயன்படுத்தாத ஒரு சட்டியிலே கொடுத்திருக்காங்க. சாப்பிட்டதும் சட்டி யைப் போட்டு உடைச்சிருக்கான் ஆச்சாராக்காரன்.

அதைப் பார்த்த கிழவி கத்தினாள், “எங்க வீட்டு பெரிசு நடமாட முடியாம படுக்கையில் கிடக்கயில ஒண்ணுக்கு கிண்ணுக்கு போக சட்டிய வச்சிருந் தேன். அதுவும் [பெரியவரும்] போய்ச் சேந்துட்டாரு. நமக்கு நாள பின்ன உதவுமேன்னு சட்டிய பத்திரமா வச்சிருந்தேன். இப்போ அதயும் போட்டு உடைச்சாச்சா” ஆச்சாரக்காரன் அதிர்ச்சியானான். மயக்கம் தான் போடலை. சரி! காசிக்குப் போய் எல்லாற்றை யும் முழுகிடலாம்னு யாத்திரையைத் தொடர்ந்தான். அடுத்த நாள் பசிச்ச போது நம்ம சிரிப்பு நடிகர் செந்தில் மாதிரி வாழைத்தோட்டத்தில பறிச்ச வாழை இலையோட ஒரு வீட்டுக்குப் போய் சாப்பாடு வாங்கி சாப்பிட்டான். சாப்பிட்டதும் அந்த வீட்டம்மா வெற்றிலை கொடுத்தது. வெற்றில இருந்திச்சு, சுண்ணாம்பு இருந்திச்சு, பாக்கு இல்ல.அந்த அம்மாட்ட கேட்டான். அந்தா மாடாக்குழியில களிப்பாக்கு இருக்கு எடுத்துக்கோண்ணிச்சு. எடுத்து வாயில போட்டு கடிச்சான். இரண்டு மூணா உடைஞ்சது பாக்கு. அந்த வீட்டம்மா சொல்லிச்சு, “அய்யா உங்களுக்கு பல்லு நல்ல பலந்தான். நானும் ரெண்டு மூணு நாளா வாயில போட்டு கடிச்சி கடிச்சிப் பார்த்தேன். ஒடபடலைன்னு மாடக்குழியில வச்சுட்டேன். இப்ப நீங்க ஒரே கடியில ரெண்டு மூணு துண்டாக்கிட்டீங்க…” “காசிக்குப் போனாலும் கருமம் தொலை யாதுன்னு” ஆச்சாரக்காரன் வீடு திரும்பினான். இது கதை. எச்சில், தீட்டு என்போரை நோக்கி வீசிய பகடி இது. நான் பத்திரிகைக்காரனாச்சே… எனக்கு என்ன ஞாபகம் வந்திச்சின்னா, “கடையில கோமியம்னு மனித சிறுநீரை விற்பதாக அர்ச்சுன் சம்பத் குடிச்சுப் பார்த்து சொன்னதுதான்…” காசிக்குப் போனாலும் கருமம் தொலையாது வாரணாசிக்கு…???