tamilnadu

img

வர்ணாசிரமம் நம்மை பிரித்தாலும் அன்பால் ஒன்றிணைவோம்: பால பிரஜாபதி அடிகளார்

சென்னை, செப். 3- வர்ணாசிரமம் நம்மை பிரித்தா லும், அன்பால் நாம் அனைவரும் ஒன்றிணைவோம் என்று மத நல்லிணக்க கருத்தரங்கில் பால பிரஜாபதி அடிகளார் தெரிவித்தார். இந்திய யூனியன் முஸ்லிம்லீக் சார்பில் தேச நேச திருப்பயணம் என்ற பெயரில் அனைத்து மதத்தலை வர்களையும் ஒருங்கிணைத்து நாடு முழுவதும் கருத்தரங்கங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தேசியத் தலை வர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில்  சென்னை யில் வெள்ளியன்று (செப். 2) கருத்த ரங்கம் நடைபெற்றது. கேரள மாநிலத் தலைவர் சாதிக் அலி சிகாப் தங்ஙள் கருத்தரங்கை துவக்கி வைத்தார். இதில் கலந்து கொண்ட பால பிரஜாபதி அடி களார் பேசியதாவது:- இஸ்லாம், கிறித்துவம் உள்ளிட்ட அனைத்து மதத்தினரோடும் நல்லி ணக்கம் பேணுவதுதான் முக்கியம் என நாம் பின்பற்றும் சமயம் கூறு கிறது. தமிழ் குறித்த வரலாற்றை நாம் முழுமையாக அறிந்துகொள்ள வேண்டும். ஏனென்றால் நாடு முழு வதும் தமிழ் இருக்கிறது, ஆனால் சமஸ்கிருதம் நாடு முழுவதும் இல்லை. எப்படி அனைத்து மரங்க ளும் இருந்தால்தான் மண்ணுக்கு பெருமையோ, அதுபோல் மதம் எதுவாக இருந்தாலும், மனிதன் என்ற அடையாளத்தோடு அனைவரும் நல்லிணக்கத்தோடு வாழ்ந்தால் தான் அது நாட்டுக்கு பெருமை. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று உலகிற்கு கற்றுக் கொடுத்த வன் தமிழன்.  தலையிலும், தொடை யிலும், மார்பிலும், காலிலும் எப்படி மனிதன் பிறக்க முடியும் என்பதை மனு தர்மம் பேசுபவர்கள் சிந்தித் துப் பார்க்க வேண்டும். மனிதன் மனித னாகப் பிறக்கிறான். சமத்துவத் தோடு பிறக்கிறான். அவனுக்கு ஒரு சமயம் பேதத்தை கொடுப்பதாக இருக்கக் கூடாது.  எனவே சாதி யில்லாத ஒரு சமூகம்தான் உயர்ந்த வையாக இருக்க முடியும்.

இந்தியா என்பது இந்துக்க ளுக்கு மட்டுமானது அல்ல, இந்தியர்களுக்கானது. இந்தியா வில் பிறந்த அனைவரும் இந்தியர் கள்தான். இந்த நாடும், மண்ணும் அனைவருக்கும் சொந்தமானது. சுதந்திரத்திற்காக போராடாத வர்கள், சுதந்திரத்திற்காக போரா டிய தேசத் தந்தை காந்தியை சுட்டுக் கொன்றவர்கள் இப்போது வேதம் ஓதுகிறார்கள். நாம் அதை ஏற்கக் கூடாது. அவர்கள் எந்த வேற்று மையை பேசினாலும், வரலாற்றை திரித்துக் கூறினாலும் நாம் ஒற்று மையாக இருந்தால் அவற்றை முறி யடிக்க முடியும். சிவாஜியை வைத்து அரசியல் செய்யப் பார்க்கிறார்கள். ஆனால் சிவாஜி இறந்த போது அவருக்கு நமாஸ் பிரார்த்தனை நடத்திய பெருமை அவுரங்கசீப்புக்கு உண்டு. அப்படிப்பட்ட இஸ்லாமியர்களை அந்நியர்கள் போல, இந்தியாவை அழிக்கப் பிறந்தவர்கள் போல அவர்கள் பேசிக் கொண்டிருக்கி றார்கள். 1927ஆம் ஆண்டு கேத்தரின் மயோ என்ற ஆங்கிலேயர் ‘மதர் இந்தியா’ என்று எழுதிய புத்தகத்தில் இந்துக் களை இந்துப் பெண்களை இழி வாக எழுதியிருந்தான். அதை மாற்றி எழுத எந்த இந்துவும் முன்வர வில்லை. ஆனால் மெஹ்பூப் கான் என்ற இஸ்லாமியர் 1957ஆம் ஆண்டு ‘மதர் இந்தியா’ என்ற திரை ப்படத்தின் மூலம் இந்து பெண்களின் நாகரிகம், பண்பாடு, பெருமைகள் குறித்து எடுத்துக் கூறியி ருந்தார்.

இஸ்லாமியர்கள் இந்தி யாவிற்கு, இந்துக்களுக்கு செய்த நன்மைகளை எல்லாம் நாம் கிராமம் கிராமமாகச் சென்று மக்களி டத்திலே எடுத்துக் கூற வேண்டும். வர்ணாசிரமம் நம்மை பிரித்தாலும், நாம் அன்பால் ஒன்றிணைவோம் அப்போதுதான் ஒற்றுமையான இந்தியாவை, உலகிற்கு வழி காட்டும் இந்தியாவை படைக்க முடியும். இவ்வாறு அவர் பேசினார். கருத்தரங்கில் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன் முடி, சிறுபான்மையினர் நலன், வெளி நாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச் சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான், சிறு பான்மையினர் ஆணையத் தலை வர் எஸ்.பீட்டர் அல்போன்ஸ், ஆர்ச் பிஷப் ஜார்ஜ் அந்தோணி சாமி, சுவாமி ஸ்ரீ ராகவேந்திர ஸ்ரீ ஹரி சுவாமி, பியாரிலால் ெஜயின், அர்பஜன் சிங் சூரி, புக்கு மௌரியா புத்தா, பேராயர்கள் எஸ்றா. சற்குணம்,ெஜ. ஜார்ஜ் ஸ்டீபன், பிஷப் கே.பி. எடிஸன், பிரம்ம குமாரி பி.கே.நிலிமா உள்ளிட்ட பலரும் பேசினர்.