அடக்குமுறைக்கு எதிராக ஆர்ப்பரிக்கும் இயக்கமாக செங்கொடி இயக்கம் வளர்ந்து இருக்கிறது. அடக்குமுறைகளுக்கு அடிபணியாது கொண்ட கொள்கைகள் மீது உறுதியாக இருந்து களம் கண்டதற்கு எடுத்துக்காட்டு தான் கீழ்வெண்மணி.
54 ஆண்டுகள் ஆனாலும் சமூக அமைப்பு இன்னும் மாறவில்லை. அப்படியேதான் இருக்கிறது. சமூகத்தில் தீண்டாமைக் கொடுமை என்பது இன்னும் நீடித்து வருகிறது. மேல் சாதிக்கு ஒரு கோவில், ஒடுக்கப்பட்டோருக்கு ஒரு கோவில் என சாதிக்கு ஒரு கோவில் இங்கு இருக்கிறது. அதுபோலவே தான் அந்தந்த சாதிக்கொரு சுடு காடு இருக்கிறது. மனிதன் இறந்த பிறகு பிணத்தில் சாதி பார்ப்பது சரியா? உயிரற்ற உடல் மீது தீயிட்டது கூட தெரியாத பிணத் திற்கு எதற்கு சாதி? ஒரு ஊரில் எவ்வளவு பெரிய சுடு காடு இருந்தாலும் பட்டியல் இனத் தைச் சேர்ந்தவர்கள் ஒருவர் இறந்து விட்டால் அவரை அடக்கம் செய் யவோ, எரிக்கவோ அந்த சுடுகாட்டில் அனுமதி இல்லை.இந்தக் கொடுமை யை இன்னும் எத்தனை நாள் நாம் பொறுத்துக் கொள்வது? எனவே, தமிழக அரசாங்கம் ஊருக்கு ஒரே சுடுகாடு என்ற சட்டத்தை இயற்ற வேண்டும். சாதி மத பேதமற்று அனை வரும் ஒரே சுடுகாட்டை பயன்படுத்த வேண்டும்.
தமிழக அரசு அனைத்து சாதியின ரும் அர்ச்சகர் ஆகலாம் என்று சட் டம் இயற்றியது. கேரளாவில் அமைந் துள்ள பினராயி விஜயன் அரசாங்கம் அதை நடைமுறைப்படுத்தியது. இன்று கேரளத்தில் அனைத்து சமூ கத்தினரும் அர்ச்சகர்களாக ஆகி உள்ளனர். பெண்கள் கட்டணமில்லாமல் பேருந்துகளில் பயணம் செய்யலாம் என்ற தமிழக அரசின் நடவடிக்கை யை மனதார பாராட்டுகிறோம். அதே சமயம் போக்குவரத்து கழகத்தில் பணி செய்து ஓய்வு பெற்ற ஊழி யர்களுக்கு எவ்வித பணப்பலனும் இல்லாமல் இதுவரை இழுத்தடிப் பது எந்த விதத்திலும் நியாயம் இல்லை. தமிழக அரசு தேர்தலுக்கு முன்பாக கொடுத்த போக்குவரத்து ஊழியர்களுக்கான வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற வேண் டும். கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு விசுவாசமாக செயல்படும் மோடி அர சாங்கத்தை வீழ்த்துவோம் என்று சூளுரைக்கும் தமிழக முதல்வரின் கருத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றுப் பாராட்டுகிறது.
மனுஷ்மிருதியை தூக்கிப் பிடிக்கும் அண்ணாமலையும், அவ ரது கட்சியும் அரசமைப்புச் சட்டத்தை தகர்க்கப் பார்க்கிறார்கள். அனைத்து தரப்பு மக்களாலும் ஏற்றுக் கொள் ளப்பட்ட அரசமைப்புச் சட்டத்தை ஆர்எஸ்எஸ் கூட்டம் புறந்தள்ளி விட்டு மனுஸ்மிருதி கோட்பாட்டை சட்டமாக்கத் துடிக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இதுபோன்ற நட வடிக்கைகளை வன்மையாகக் கண்டிப்பதோடு மிகக் கடுமையான போராட்டங்களை நடத்துவதற்கும் தயங்க மாட்டோம். 2024 நாடாளுமன்ற தேர்தலில் ஆர்எஸ்எஸ் - பாஜக எப்படி யும் ஆட்சியை கைப்பற்றி விடலாம் என்று துடிக்கிறது. தலைகீழாக நின் றாலும் இவர்களால் ஒருபோதும் 2024 தேர்தலில் வெற்றி பெற முடி யாது. இதைத்தான் இமாச்சலப்பிர தேச தேர்தலும், தில்லியில் நடை பெற்ற உள்ளாட்சித் தேர்தலும் நமக்கு சுட்டிக் காட்டுகிறது. மக்களுக்கு கொடுக்கப்படும் இலவசங்களை இழிவுபடுத்தும் பாஜக, மோடி அரசு குஜராத் தேர்த லின் போது கொடுத்த வாக்குறுதி கள் என்ன? தமிழ்நாட்டில் இல வசங்களை கொடுத்து மக்களை ஏமாற்றுகிறார்கள் என்று மேடைக்கு மேடை பேசும் பாஜக, குஜராத் மக்க ளுக்கு கொடுத்த வாக்குறுதிகளில் இலவசங்களை தருவோம் என்று சொல்லித் தான் வெற்றி பெற முடிந்தி ருக்கிறது. அனைத்து மதச்சார்பற்ற, ஜன நாயக முற்போக்கு சக்திகளை ஒன்றி ணைத்து நாடாளுமன்றத் தேர்த லுக்கான வெற்றிக்காக உழைப் போம் என்று வீரவெண்மணி தியாகி களின் பூமியிலிருந்து சூளுரைப் போம். வெண்மணியில் சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆற்றிய உரையிலிருந்து... படங்கள்-செய்தி: ஆதி.உதயகுமார்
கீழவெண்மணி தியாகிகள் நினைவிடத்தை புதுப்பித்து மிக நேர்த்தியாக வடிவமைத்த பொறியாளர் சிவகுமாருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பொன்னாடை போர்த்தி பாராட்டினர்.