tamilnadu

img

அக்குபங்சர் மருத்துவ சிகிச்சையாளர்களை நெறிப்படுத்த தனி கவுன்சில் அமைத்திடுக!

சேலம், ஜூலை 1- அக்குபங்சர் மருத்துவ சிகிச்சை யாளர்களை நெறிப்படுத்த தனி  கவுன்சில் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு அக்கு பங்சர் சிறப்பு மாநாடு கோரிக்கை விடுத்துள்ளது. இந்தியன் நேச்சுரல் தெரபி கவுன்சில் அமைப்பின் சார்பில் சேலத்தில் அக்குபங்சர் சிறப்பு மாநாடு நடைபெற்றது. மரு.அதியன் வரவேற்புரையாற்றினார். மரு.மகா விஷ்ணு துவக்கவுரையாற்றினார். சேலம் நாடாளுமன்ற உறுப்பி னர் எஸ்.ஆர்.பார்த்திபன் தலை மையேற்று சிறப்புரையாற்றினார்.  சேலம் சண்முகா மருத்துவ மனை நிர்வாக இயக்குநர் டாக்டர் பன்னீர்செல்வம் வாழ்த்துரை வழங்கினார். சரவணா மருத்துவ மனை இயக்குநர் டாக்டர். ரவிச் சந்திரன், டாக்டர் ஆதிமூலம், அக்கு சிகிச்சையாளர்கள் சங்க பொதுச் செயலாளர் மரு.ரமேஷ்பிரபு, மதுரை வடக்கு மாவட்ட திமுக மருத்துவர் அணி அமைப்பாளர் டாக்டர். தனபாலன், சேலம் மத்திய மாவட்ட திமுக மருத்துவர் அணி அமைப்பாளர் டாக்டர் சுகுமாரன் எம்.டி (ஆர்த்தோ) , சேலம் மாநக ராட்சி மாமன்ற உறுப்பினர் - மாநக ராட்சி அமைப்புக் குழுத் தலைவர் ஜெயகுமார் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். ஐ.என்.டி.சி. அமைப்பின் தலைமை நிர்வாகிகள் மற்றும் கல்விக்குழு உறுப்பினர்கள் மரு. ஓசோ முரளி, மரு.ஜெயகுமார், மரு. அரசு, மரு.சண்முகானந்தம் ஆகி யோர் அக்குபங்சர் ஆய்வுத்தாள்  களைச் சமர்ப்பித்து உரையாற்றி னர். அக்குபங்சர் உள்ளிட்ட மாற்று மருத்துவங்களின் நலமளிக்கும் ஆற்றலை, சிறப்புக்களைப் பற்றி மக்களிடம் தொடர்ச்சியாகத் தொடர்பு கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கூறி  மரு.ஆவுடேஸ்வரி, மரு.சுசிலா  “மக்களுடன் உரையாடுவோம்” எனும் தலைப்பில் உரையாற்றினர்.

அரசுகளும், நீதிமன்றங்களும் வழங்கியுள்ள ஆணைகள், சட்ட  திட்டங்களுக்கு உட்பட்டு, எவ்விதத் தவறுகளுக்கும் இடமளிக்காமல் அக்குபங்சர் சிகிச்சையாளர்கள் நடந்து கொள்வதும், அங்கொன் றும் இங்கொன்றுமாக சில அதி காரிகள் அக்குபங்சர் சிகிச்சைக்கு வரம்பு மீறி இடையூறு செய்தால், சட்டப்பூர்வமாக எதிர்கொள்வதும் அவசியம் என்று வழக்கறிஞர் விஸ்வநாத் தனது உரையில் குறிப்  பிட்டார். ஐ.என்.டி.சி. தேசிய தலைவர்  மரு.வெங்கடாசலம் மாநாட்டுத் தீர்மானங்களை விளக்கி உரை யாற்றினார். அவரது உரையில் “அடித் தட்டு, நடுத்தர வகுப்புகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான படித்த  இளைஞர்களும், பெண்களும் பல்க லைக்கழகங்கள் வாயிலாகவும், அரசு பதிவு பெற்ற தனியார் மாற்று  மருத்துவ அமைப்புகள் வாயிலாக வும் அக்குபங்சரை முறையாகக் கற்று, தேர்ச்சி பெற்று தமிழ்நாடு முழுவதும் கிராமப்புறங்களிலும், மலைப்பிரதேச வாழிடங்களிலும், புறநகர் பகுதிகளிலும் பல லட்சக் கணக்கான எளிய, நடுத்தர மக்க ளுக்கு சிகிச்சையளித்து சேவை யாற்றி வருகின்றனர்.

ஒன்றிய மக்கள் நல்வாழ்வுத் துறையின் 2003ஆம் ஆண்டு அர சாணை அடிப்படையில் தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதிலும் பல  லட்சக்கணக்கான அக்குபங்சர் சிகிச்சையாளர்கள் உருவாகி சிறப்  பாக சேவை புரிந்து வருகின்றனர்.  இத்தகைய அக்குபங்சர் மருத்து வத்திற்கு, மருத்துவ சிகிச்சையா ளர்களுக்கு அங்கீகாரம் வழங்கி 1996-இல் மேற்கு வங்கத்தில் தனிச் சட்டம் இயற்றப்பட்டது. 2017-ல்  மகாராஷ்டிராவில் மாநில அளவி லான அக்குபங்சர் கவுன்சில் அமைக்கப்பட்டது. கர்நாடக மாநி லத்திலும் “கர்நாடகா தனியார் மருத்  துவ நிறுவனச் சட்டம் 2007” (Karnataka Private Medical Establishment Act 2007 and  Ruals 2009) மூலமாக ஆங்கில  மருத்துவர்கள், ஆயுஷ் மருத்து வர்கள் மருத்துவமனைகளையும் பதிவு செய்கின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்  படுத்தும் வண்ணம் சில மாவட்டங்க ளில் சுகாதாரத்துறை சார்ந்த சில  அலுவலர்கள் அக்குபங்சர் சிகிச்சை யாளர்களைச் சட்டவிரோதமாக அச்சுறுத்துவதும், நடவடிக்கை கள் மேற்கொண்டு அவர்களின்  வாழ்வாதாரத்தை சீர்குலைப்பதும் நடைபெறுவது வேதனையளிக்கி றது. தமிழ்நாடு அரசு இதனை உட னடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.  பல்லாயிரக்கணக்கான அக்குபங் கர் சிகிச்சையாளர்களின் வாழ்வா தாரத்தை கருணையோடு பாது காப்பதும், அக்குபங்சர் மருத்து வத்தை அங்கீகரித்து நெறிப்படுத்து வதற்கு தனி ஆணையம் அமைப்ப தும் காலத்தின் அவசியம். முதல மைச்சரும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரும் உடனடியாக தலையிட்டு அக்குபங்சர் தெரபிஸ்டு களின் தொழில் உரிமைக்கு பாது காப்பு அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். 500க்கும் மேற்பட்ட அக்குபங்சர் சிகிச்சையாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டனர்.