சென்னை, ஜூலை 1- ஓய்வூதியத்தை உயர்த்தாத பாஜகவுக்கு இல்லை வாக்கு என்ற முழக்கத்தை அகில இந்திய இபிஎஸ் ஓய்வூதியர்கள் மாநாடு எழுப்பி உள்ளது. அகில இந்திய இபிஎஸ் ஓய்வூதியர்கள் 3வது தேசிய மாநாடு ஜூன் 27 அன்று மகாரா ஷ்டிர மாநிலம் ஷீயாகான் (புல்தான்) எனும் இடத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில், குறைந்தப் பட்ச ஓய்வூதியமாக 9 ஆயிரம் ரூபாய் மற்றும் அகவிலைப்படி வழங்க வேண்டும், மருத்துவ காப்பீடு திட்டத்தை செயல்படுத்த வேண்டும், இபிஎஸ் அவசர நிதியை (கார்பஸ் அமவுண்ட்) தனி யாருக்கு கொடுக்கக் கூடாது, இலவச அரிசி, மருத்துவம் வழங்குவதோடு, ரயில் கட்டண சலுகைகள் தர வேண்டும். உயர் ஓய்வூதியம் வழங்க உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பை செயல்படுத்த வேண்டும், கோரப்படாமல் உள்ள ஓய்வூ திய தொகைகளை, ஓய்வூதிய நிதிக்கு மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை மாதத்தில் சுவரொட்டி பிரச்சாரம், ஆகஸ்ட் மாதத்தில் ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு உண்ணாநிலை போராட்டம், செப்டம்பர் மாதத்தில் தொழிற் சாலைகள் முன் பிரச்சாரக் கூட்டம், அக்டோபர் மாதம் வேலை நிறுத்தம் செய்வது, நவம்பர் மாதம் 16ந் தேதி ஓய்வூ திய தினத்தை கடைபிடிப்பது, டிசம்பர் 20ந் தேதி ரயில் மறி யல் செய்வது என தீர்மானிக்கப் பட்டுள்ளது.
இதற்கு பிறகும் கோரிக்கை களை நிறைவேற்றாவிடில், 2024 ஜனவரி மாதத்தில் ‘ஓய்வூதி யத்தை உயர்த்தாத பாஜக வுக்கு இல்லை வாக்கு (நோ இன்கிரிஸ் இன் பென்சன், நோ வோட் டு பிஜேபி) என்ற பிரச்சாரத்தை மேற்கொள் வது என்றும் மாநாட்டில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இபிஎஸ் ஓய்வூதியர்கள் அமைப்பின் ஒருங்கிணைப் பாளர் ஆ.தர்மஜன் (கேரளா) மாநாட்டிற்கு தலைமை தாங்கி னார். துணை ஒருங்கிணைப் பாளர் அதுல்தீகே (மகாரா ஷ்டிரா), பொருளாளர் மோகன் (கேரளா), தமிழ்நாட்டிலிருந்து கே.கனகராஜ், கே.பி.பாபு உள்ளிட்ட 9 மாநிலங்களை சார்ந்த சுமார் 500 பேர் மாநாட்டில் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் அகில இந்திய சேர்மேனாக எம்.என்.ரெட்டி (தெலுங்கானா), தலை வராக எம்.தர்மராஜன் (கேரளா), செயல் தலைவராக எம்.மோகன் (கேரளா) ஆகி யோரும், தமிழகத்திலிருந்து துணைத் தலைவராக கே.கன கராஜ், அமைப்பு செயலாளராக கே.பி.பாபு ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.