கீழையூர் அரசுப் பள்ளியில் சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு
அறந்தாங்கி, ஜூன் 8 - புதுக்கோட்டை மாவட்டம் கீழையூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தின விழா பள்ளி தலைமையாசிரியர் (பொ) அனிதா தலைமையில் நடைபெற்றது. பள்ளியின் ஆசிரியைகள் கண்ணகி, டெய்சி, இளமதி, கணினி ஆசிரியை ஆர்.அபிராமி, உடற்கல்வி ஆசிரியர் வி.தருமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியின் தமிழாசிரியர் பி.சுசிலா வரவேற்புரை ஆற்றினார். பள்ளியின் சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் முனைவர் மு. அக்பர் அலி யூசுப் கஸ்ஸாலி உரையாற்றினார். பின்னர் நடந்த விழிப்புணர்வு பேரணி, மூன்றுகுடிபட்டி, தெற்குப்பட்டி மற்றும் பள்ளியை சுற்றியுள்ள தெருக்களின் வழியாக சென்று வந்தது. பேரணியில் மாணாக்கர்கள் விழிப்புணர்வு பதகைகளை கையில் ஏந்தி வந்தனர். பின்னர், சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளியில் ஓவிய போட்டி மற்றும் கட்டுரைப் போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியர் ஆ. நடராஜன் நன்றி கூறினார்.