tamilnadu

img

பொறியாளர் கவின் சாதி ஆணவப் படுகொலை தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டன ஆர்ப்பாட்டம்

பொறியாளர் கவின் சாதி ஆணவப் படுகொலை தீண்டாமை ஒழிப்பு முன்னணி  கண்டன ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், ஆக 1-  தூத்துக்குடி பொறியாளா் கவின் சாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகே, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில், வியாழக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.  கவின் சாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், தமிழ்நாடு அரசு, சாதி ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக தனிச்சட்டம் இயற்ற வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவா் கே.பன்னீா்செல்வம் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஆா்.கலைச்செல்வி, பொருளாளா் பி.சத்யநாதன், முன்னாள் மாவட்டச் செயலாளர் என்.சிவகுரு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் ஆா்மனோகரன், என்.சரவணன், மூத்த தலைவர்கள் என்.சீனிவாசன், ஆா்.சி.பழனிவேலு, சிபிஎம் மாநகரச் செயலாளர் எம்.வடிவேலன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்க மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் கவிஞர் களப்பிரன், அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் ஆா். பிரதீப் ராஜ்குமார், அகில இந்திய வழக்கறிஞா் சங்க மாவட்டச் செயலாளர் எம்.கே.சேகா், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழு மாவட்டச் செயலாளர் என்.குருசாமி, வாலிபர் சங்க மாவட்டக்குழு உறுப்பினர் பி.கிரண்குமார், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட நிர்வாகிகள் கே.முனியாண்டி, வீ.கரிகாலன், ஏ.அருணா, இடதுசாரிகள் பொது மேடை ஒருங்கிணைப்பாளா் துரை. மதிவாணன், வர்க்க, வெகுஜன அமைப்பு நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனா்.