திருச்சி, செப். 23- ஊராட்சி செயலாளர்களுக்கு காலமுறை ஊதியத்தின் அடிப் படையில் ஓய்வூதிய மற்றும் ஓய்வூதியப் பலன்களை வழங்க வேண்டும் என்று ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்க 3-ஆம் மாநில பிரதிநிதித்துவப் பேரவை கூட்டம் திருச்சியில் சனிக்கிழமை (செப்.23) நடை பெற்றது. மாநிலத் தலைவர் ச.ராம மூர்த்தி தலைமை தாங்கினார். கரவுவத் தலைவர் மு.பரமேஸ்வ ரன் முன்னிலை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாநில பொதுச் செயலாளர் ஆ.செல்வம் துவக்க உரையாற்றினார். மாநில பொதுச் செயலாளர் பா.ரவி வேலை அறிக்கையை வாசித்தார். மாநில பொருளா ளர் மு.மகாலிங்கம் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். அனைத்து அரசுத்துறை ஓய்வூதி யர்கள் சங்க மாநிலத் தலைவர் என்.எல்.சீதரன் நிறைவுரையாற்றி னார். மாவட்ட கருவூல அலுவலர் க.பாபு, பி.கிருஷ்ணமூர்த்தி, அ.கென்னடி பூபாலராயன், ச.பாரி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
வரவேற்புக் குழு தலைவர் எம்.வி.செந்தமிழ் செல்வன் வரவேற்றார்.செயலா ளர் டி.வி.மனோகரன் நன்றி கூறினார். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமலாக்குக! கூட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தேர்தல் அறிக்கையில் அறிவித்த வாக்குறுதியின்படி 70 வயது நிறைவு பெற்ற ஓய்வூதியர்க ளுக்கு 10 விழுக்காடு கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள ஒழுங்கு நடவடிக்கைகள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காண வேண்டும். பணி ஓய்வு பெறும் நாளில் தற்காலிக பணி நீக்கம் செய்யக்கூடாது என்ற தமிழ்நாடு அரசின் ஆணையை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும். ஊரக வளர்ச்சித்துறை அலுவ லர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு ஊரக வளர்ச்சி இயக்குநர் மாவட்ட ஆட்சியர்க ளால் விசாரணை அலுவலர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர். விசாரணை செய்து விசாரணை அறிக்கை தாக்கல் செய்வதில் தாமதம் தவிர்க்கப்பட வேண்டும். ஓய்வு பெற உள்ளவர் மீது தனி கவனம் செலுத்தி தணிக்கை தடைகளை முடித்து ஓய்வு முன் மொழிவுகளை உரிய காலத்தில் அனுப்ப வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.