ஒன்றிய, மாநில அரசுகள் மற் றும் ரயில்வே உள்ளிட்ட வற்றில் பத்தாம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்புகளை கல்வித் தகுதிகளாகக் கொண்டு பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. டி.என்பி.எஸ்.சி. குரூப் 4 ரயில்வே எஸ்.எஸ்.சி (சி.எச்.எஸ்.எல்)(SSC CHSL) (12 ஆம் வகுப்பு தகுதி) எஸ்.எஸ்.எஸ் (எம்.டி.எஸ்) (SSC MTS) (10ஆம் வகுப்பு தகுதி) மேலே சொல்லப்பட்டுள்ள தேர்வுகள் அவற்றில் சில என்று கூற லாம். நல்ல ஊதியமும், நலல வருங் காலமும் கொண்ட இது போன்ற பணியிடங்களுக்கான தேர்வு கள் ஒவ்வொரு ஆண்டும் நடை பெறுகின்றன. பத்து மற்று பன்னி ரெண்டாம் வகுப்புகள் வரையில் படித்த பாடங்களில் இருந்துதான் வினாக்கள் வருகின்றன. பல பள் ளிக்கூடங்களில் இதற்கான வழி காட்டு நிகழ்வுகளும் நடக்கின்றன. பள்ளிப்படிப்பு அரசு வேலைகளுக் கான தேர்வுகளில் பெரும் பங்கை ஆற்றுகின்றன என்று பெரும் பாலான மாணவர்களுக்கு வழி காட்டுதல் கிடைத்து விடுகிறது. படிக்க இயலாத சூழலில் இருப் பவர்களில் பலர், தஙகள் பத்தாம் வகுப்பு மதிப்பெண்களை வைத்து கிராமத் தபால் நிலையங்களில் குறைவான ஊதியத்தில் வேலைக்கு சேர்ந்து விடுகிறார்கள். பின்னர், அனுபவத்தின் அடிப்படையில் தேர்வு எழுதி பதவி உயர்வைப் பெறும் வாய்ப்புகள் உள்ளன. அரசுப் பள்ளிகளில் படித்த மாண வர்கள் எட்டாம் வகுப்பில் NMMS (National Means Cum Merit Scholarship) என்ற தேர்வினை எழுதியிருப்பார்கள். இது ஒரு மினி டி.என்.பி.எஸ்.சி. தேர்வு மாதிரி யானது. கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய பாடங்க ளில் இருந்து வினாக்கள் இடம் பெறும். இதில் வெற்றி பெறுபவர் கள் அடுத்து எதிர்கொள்ளவிருக் கும் அனைத்து நுழைவுத் தேர்வுகள் மற்றும் போட்டித் தேர்வுகளைப் பெரும் நம்பிக்கையுடன் எதிர் கொள்ளலாம். கல்லூரிப் படிப்பின் பாதி யிலேயே வேலை கிடைத்து அதில் சேர வேண்டி வந்தால், அஞ்சல் வழி யில் படிப்பைத் தொடர்ந்து கொள்ள லாம்.