tamilnadu

img

மின்துறை ஊழியர்கள் ஜூன் 26-இல் வேலைநிறுத்தம்

மின்துறை ஊழியர்கள் ஜூன் 26-இல் வேலைநிறுத்தம்

மின் வாரியங்களை தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக ஜூன் 26 அன்று  நாடு முழுவதும் மின் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். மின் ஊழியர்கள் மற்றும் பொறியா ளர்களின் தேசிய ஒருங்கிணைப்பு குழுவின் தென் மண்டலக் கூட்டம் ஞாயிறன்று (மார்ச்  16) சென்னையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மாநில மின்  விநியோக நிறுவனங்களை தனியார்மய மாக்கும் நடவடிக்கையை விரைவுபடுத்த ஒரு  அமைச்சர் தலைமையில் குழு அமைக்கப் பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களில் தனி யார்மயமாக்க முயற்சிகள் தொடங்கப் பட்டுள்ளன. சத்தீஸ்கர், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் புதுச்சேரியில் தனியார் மயமாக்கும் பணி நடந்து வருகிறது. இதனை  எதிர்த்து ஜூன் 26 அன்று தேசிய அளவில்  வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்யப் பட்டுள்ளது. மேலும், 4 தொழிலாளர் சட்டத் தொகுப்பு களை அறிவிப்பு செய்தவுடன் அனைத்து மின்வாரிய அலுவலகங்களிலும் நகல் எரிப்பு  போராட்டம் நடத்தப்படும். வேலை நிறுத்தத்தை விளக்கி ஏப்.15-க்குள் அனைத்து சங்க மாநாடுகள், மக்கள் சந்திப்பு இயக்கம், பிரச்சார இயக்கம், பேரணி கள் நடத்தப்படும். மத்திய தொழிற்சங் கங்கள் மற்றும் தொழில்வாரி சம்மேள னங்கள் அறிவிக்கும் வேலைநிறுத்தத்திலும் பங்கேற்பது என்றும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஒருங்கிணைப்புக் குழு ஒருங்கிணைப்பா ளர் பி.என்.சௌத்ரி, அய்ப்பீஎஃப் தலைவர் ஷைலேந்திரா டூபே, இந்திய மின் ஊழியர் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் சுதீப் தத்தா, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் பொதுச் செயலாளர் எஸ்.ராஜேந்திரன் மற்றும் கேரளா, கர்நாடகா, புதுச்சேரி, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா சங்கங்களின் தலைவர்கள் பங்கேற்றனர். மின் ஊழியர்கள் மற்றும் பொறியா ளர்களின் தேசிய ஒருங்கிணைப்பு குழுவின் தென்மண்டல ஒருங்கிணைப்பாளராக எஸ். ராஜேந்திரன் தேர்வு செய்யப்பட்டார்.