நாமக்கல்,மார்ச் 14- நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 370 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 375 காசுகளாக அதிகரித்துள்ளது. கறிக்கோழி கிலோ ரூ.132-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதற்கிடையே பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கி ணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.2 உயர்த்த முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.134 ஆக அதிகரித்து உள்ளது. முட்டைக்கோழி கிலோ ரூ.66-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. நாமக் கல்லில் நடந்த முட்டைக்கோழி ஒருங்கி ணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை கிலோ ரூ.4 உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டைக்கோழி விலை கிலோ ரூ.70 ஆக அதிகரித்து இருப்பதாக பண்ணை யாளர்கள் தெரிவித்தனர்.