சென்னை,பிப்.15- வினாத்தாள் கசிந்த விவ காரம் தொடர்பாக திருவண்ணா மலை மாவட்டம் முதன்மை கல்வி அதிகாரி அருள்செல்வம் பணி யிடை நீக்கம் செய்யப்பட் டுள்ளார். பத்து மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த தேர்வின்போது வினாத் தாள்கள் திருவண்ணாமலையில் உள்ள 2 தனியார் பள்ளிகளில் முன்கூட்டியே கசிந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இது தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகள் விசா ரணை நடத்தி வருகிறார்கள். இந்தநிலையில், திருவண் ணாமலை மாவட்டம் முதன்மை கல்வி அதிகாரி அருள்செல் வம் பணியிடை நிக்கம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக விழுப்புரம் மாவட்டம் முதன்மை கல்வி அதிகாரி கிருஷ்ணபிரியா கூடுதல் பொறுப்பாக இதனை கவனிப்பார் என்று பள்ளி கல்வி இணை இயக்குநர் நரேஷ் தெரி வித்துள்ளார். இந்த கூடுதல் பொறுப்பினை ஏற்கும் கல்வி அதிகாரி அந்த பணியிடத்தில் மறு அலுவலர் பணி ஏற்கும் வரை முழு கூடுதல் பொறுப்பில் செயல்படவும் அனு மதித்து ஆணை வழங்கப்ப டுவதாக தெரிவித்துள்ளார்.