சென்னை, மார்ச் 28- அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று அக்கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித் துள்ளது. இது குறித்து அக்கட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பில் அதிமுக பொதுச் செய லாளர், கட்சியின் அடிப்படை உறுப்பினர் கள் அனைவராலும் ஒருமனதாக தேர்ந் தெடுக்கப்பட்டுள்ளார். இது, தேர்தல் ஆணையாளர்களான, நத்தம் இரா. விசுவநாதன், பொள்ளாச்சி ஏ.ஜெய ராமன் ஆகியோரால் அறிவிக்கப்பட்டு, அதற்கான படிவத்தை கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கினார்கள் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர் களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “ஒட்டுமொத்த தொண்டர்களின் ஆதர வோடு பொதுச் செயலாளர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளேன். எம்ஜிஆர், ஜெயலலிதா கனவை நிறைவேற்று வேன்” என்று கூறினார்.
உயர்நீதிமன்றம் தீர்ப்பு
முன்னதாக, கடந்த ஆண்டு ஜூலை 11-ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் கலைக்கப்பட்டன. பொதுச் செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வருவது எனவும், இடைக்கால பொதுச் செயலாள ராக எடப்பாடி பழனிசாமியை நியமித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனையடுத்து, ஓ.பன்னீர்செல்வம், ஆர்.வைத்தியலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கியும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்தும், அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு அறிவிக் கப்பட்டுள்ள தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரியும் பன்னீர்செல்வம் மற்றும் அவ ரது ஆதரவாளர்கள் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில், வழக்குகள் தொட ரப்பட்டன. இந்த வழக்குகளை நீதிபதி கே. குமரேஷ்பாபு, மார்ச் 22ஆம் தேதி 7 மணி நேரத்துக்கும் மேலாக விசாரித் தார். ஓபிஎஸ், இபிஎஸ் என இருதரப்பி லும் இந்த வழக்கில் மூத்த வழக்கறி ஞர்கள் ஆஜராகி வாதிட்ட நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கில் செவ்வா யன்று (மார்ச் 28) நீதிபதி கே.குமரேஷ் பாபு தீர்ப்பு அளித்தார். அந்தத் தீர்ப்பில், அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்று அவர் உத்தரவிட்டார். இதையடுத்து அதிமுக பொதுச்செய லாளர் தேர்வை அறிவிக்க இருந்த தடை யும் நீங்கியது. மேலும் ஒருங்கிணைப்பா ளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஆர்.வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகரன் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கியதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. பொதுக்குழு தீர்மானங்களுக்கும், பொதுச் செயலாளர் தேர்தலுக்கும் தடை விதித்தால், ஒன்றரை கோடி கட்சித் தொண்டர்களைக் கொண்ட கட்சிக்கு ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்து வதுடன், கட்சியின் செயல்பாடுகளை பாதிக்கும் என்பதால், தடை எதுவும் விதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.