tamilnadu

img

பல்கலைக்கழகங்களின் தன்னாட்சி உரிமையை பறிக்காதீர்!

மதுரை, ஜூலை 1- பல்கலைக்கழகங்களின் தன்னாட்சி  உரிமையைப் பறிக்கும் வகையில் மாநி லம் முழுவதும் ஒரே பாடத்திட்டம் என்ற  செயல்திட்டத்தை தமிழக அரசு அமல் படுத்த உள்ளதாகவும் இது தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்த எடுக்கும் முயற்சியாகத் தெரிகிறது என வும் கல்லூரி ஆசிரியர்களின் கூட்டு நட வடிக்கைக்குழு அச்சம் தெரிவித்துள் ளது. பல்கலைக்கழகங்களின் தன்னாட்சி உரிமை பறிப்பு தொடர்பாக மதுரை காம ராசர், மனோன்மணியம் சுந்தரனார், அன்னை தெரசா மற்றும் அழகப்பா பல்கலைக்கழகக் கல்லூரி ஆசிரி யர்கள் மன்றம் (மூட்டா), தமிழ்நாடு அர சுக் கல்லூரி ஆசிரியர்கள் சங்கம்,  பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்க ளின் கூட்டமைப்பான கல்லூரி ஆசிரி யர்கள் கூட்டு நடவடிக்கைக்குழு உறுப் பினர்கள் மதுரையில் சனிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தனர். செய்தியாளர்களிடம் பேசிய கூட்டு நடவடிக்கைக்குழு ஒருங்கிணைப்பா ளர் பேரா.மு.நாகராஜன், “அகில இந்  திய அளவில் உயர் கல்வியில் தமிழ்நாடு மிகச்சிறந்த இடத்தில் உள்ளது. அதற் குக் காரணம் தமிழக அரசின் கல்விக் கொள்கைகள், கல்வியாளர்களின் ஆலோசனைகள், தனித்த பாடத் திட்டங்கள், ஜனநாயக முறைப்படி செய்யப்பட்ட சீர்திருத்தங்கள் ஆகிய வைதான்.

இந்தச் சூழலில், தமிழ்நாடு மாநில  உயர் கல்வி மன்றம் கல்வியாளர்களை, ஆசிரியர் சங்கங்களை கலந்தாலோ சிக்காமல் மாநிலம் முழுவதும் ஒரே  பாடத் திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது. இது பல்கலைக்கழகங்களின் தன்னாட்சி உரிமையைப் பறிப்பதோடு தேசிய கல்விக்கொள்கையை அமல் படுத்த எடுக்கும் முயற்சியாகும்.  “மாநிலம் முழுவதும் ஒரே பாடத் திட்டம்” என்பது பள்ளிப்பாடத்திற்கும் கல்லூரி பாடத்திற்கும் எந்த வித்தியாச மும் கிடையாது; பள்ளி மாணவர் களுக்கு நோட்ஸ்-கள் விற்பது போல்,  கல்லூரிகளும் சிலர் நோட்ஸ் அடித்து விற்பனை செய்வார்கள், அவ்வளவு தான்.

அரசு, கல்வியாளர்கள், கல்வி யியல் வல்லுநர்கள், பேராசிரியர்கள், சங்கங்கள் ஆகியவற்றை அரசு கலந்து ஆலோசிக்க வேண்டும். ஒரே  பாடத்திட்டத்தில் அறிவியல் சார்ந்த பாடங்கள் மிகவும் தரம் குறைந்ததாக உள்ளது. சில பாடங்கள் மேம்பட்டுள் ளது. தமிழக அரசு மாநிலம் முழுவதும்  ஒரே பாடத்திட்டம் என்பதைத் திரும்பப்  பெற வேண்டும்” என்றார். மற்றொரு உறுப்பினர் கூறுகையில்,  குறிப்பாக கணிதம், விலங்கியல், கணிப்பொறி அறிவியல், பொருளி யல், வணிகவியல் போன்ற துறை களுக்குத் துணைப்பாடங்களாக இருந்து வருகிற இயற்பியல், தாவர வியல், வணிகவியல் மற்றும் பொருளி யல் போன்ற துணைப்பாடங்கள் நீக் கப்பட்டுள்ளன. மேலும் பல புதிய மாற்  றங்கள் குழப்பங்களையும், எதிர்மறை தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளன” என்றார். ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் வெவ்வேறு பாடங்கள் உள்ளன. மாண வர்கள் தங்களுக்குத் தேவையான பாடத்தை எடுத்துப் படிப்பார்கள். “கல்வி என்பது கடல்” போன்றது. இப்போது ஒரே பாடத்திட்டம் எனக் கூறுவது ஏற்புடையதல்ல என்றார். அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரி யர்களுக்கு மட்டும் பணி மேம்பாடு  பணப்பயன், நிலுவைத் தொகை வழங் கப்படாதது, தனியார் உதவிபெறும் கல்வி ஆசிரியர்களுக்கான பணி  மேம்பாடு, முனைவர், ஆய்வியல் நிறை ஞர் பட்ட ஊக்கத்தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 8  அன்று சென்னை, திருச்சிராப்பள்ளி, மதுரை உள்ளிட்ட நகரங்களில் உண்ணாவிரதம், ஜூலை 25 அன்று  சென்னை கல்லூரிக் கல்வி இயக்குநர்  அலுவலகத்தில் பெரும் திரள் முறை யீடு போராட்டம் நடத்த உள்ளதாக ஒருங்கிணைப்பாளர் பேரா. மு.நாக ராஜன் கூறினார்.