tamilnadu

img

எல்ஐசியை தனியார்மயமாக்காதீர்!

ஹைதராபாத், டிச.11- முகவர்களுக்கு எதிராகவும்,  பொதுத்துறை  எல்ஐசி நிறுவனத்தை தனியார்மயமாக்கும் நோக்குடனும் இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்  றும் மேம்பாட்டு ஆணையம்  ( Insu rance Regulatory and Development  Authority of India -IRDAI) கொண்டு  வரும்” பீமா சுகம் எனும் பரிவர்த்தனை யை கைவிடக் கோரி அகில இந்திய எல்.ஜ.சி முகவர்கள் சங்க ( லிகாய்) மத்திய கமிட்டி அறிவிப்பின்படி  வெள்  ளியன்று  ஹைதராபாத்தில் சங்கத்தின் அகில இந்திய தலைவர்- முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்  பாசுதேவ் ஆச்சார்யா தலைமையில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.  இந்தியாவின் அனைத்து மாநி லங்களிலும் இருந்து ஆயிரக்கணக் கான முகவர்கள் தர்ணாவில் கலந்து கொண்டனர்.  முடிவில் பொதுச்செய லாளர் பி. ஜி. திலிப் தலைமையில் சங்க நிர்வாகிகள் ஐஆர்டிஏஐ அதிகாரிகளி டம் கோரிக்கை மனுவை கொடுத்த னர்.