மதுரை. ஜூன் 19- தனித்துவத்தின் உரிமையும், பன்முகத் தன்மையின் வலிமைக்கும் பாஜக-ஆர்எஸ்எஸ் அமைப்புகளால் ஆபத்து நேரும் சூழல் உள்ளது. இவர்களுக்கு எதிராக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கமும் ஜன நாயக சக்திகளும் கருத்தியல் தளத்திலும், பண்பாட்டுத்தளத்திலும் தங்களது நடவடிக்கை களை அதிகப்படுத்த வேண்டியது அவசியம் என தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை மேடையின் மாநிலத் தலைவர் பேரா.அருணன் வலியுறுத்தினர், சங்கத்தின் மதுரை மாவட்ட ஒன்பதாவது மாநாட்டையொட்டி மதுரையில் நடைபெற்ற சிறப்புக் கருத்தரங்கில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:- தனித்துவம், பன்மைத்துவத்திற்கு எதிராக “ஒற்றைத்துவம்” வருகிறது. இது நாட்டிற்கு பேரபாயம். ஒரே மதம், ஒரே நாடு என்கிறது சங்கிகள் கூட்டம். சங்கிகள் நோக்கம் இந்துமதத்தை கட்ட மைப்பதல்ல. சனாதன மதத்தை கட்டமைப்பது தான். அதற்கு இந்துக்களிடம் உள்ள அறியாமையை மூலதனமாக்கப் பார்க்கிறது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சங்பரி வாரத்தின் நோக்கத்தை தெளிவுபடுத்தி விட்டார். ரிஷிகள்-முனிவர்கள் கூறியதன் அடிப்படையில், சனாதனத்தின் வழியில் இந்த நாடு கட்டமைக்கப் பட்டுள்ளது என்கிறார். சனாதனத்தில் சாதி கிடை யாது என்கின்றனர் சங்கிகள். அப்படியென்றால் வர்ணாசிரமம், பகவத்கீதை, ரிக்வேதத்தின் சில பகுதிகள், மனு தர்மம் ஆகியவை சனாதனத்தில் இடம்பெறாது என்பதை ஆளுநர் ரவி தெளிவு படுத்த வேண்டும். சனாதனம் என்ற பெயரில் பெண்ணடிமைத்தனத்தை இந்துக்களிடம் திணிக்க முயல்கிறது.
இந்து சொந்தங்களே என்ற போலி பிரச்சாரம்
திரொலிக்கிறது. அப்படியென்றால் உயர் வகுப்பைச் சேர்ந்த இந்து பட்டியல் சாதியினர், பழங்குடியின சமூக மக்களுக்கு பெண் கொடுக்கத் தயாரா? அனைத்து சாதியிலும் உள்ள அர்ச்சகர் பயிற்சி பெற்ற இந்துக்கள் கோவில்களில் அர்ச்சகர் ஆக முடியுமா? பெண்கள் அர்ச்சகர் ஆக முடியுமா? சங்கர மடம், ஜீயர் மடங்களில் அனைத்து சாதியினரும் மடாதிபதிகள் ஆக முடியுமா? மதுரை வீரனை, கருப்பணசாமியை, ராக்காச்சி அம்மனை வணங்கும் மக்களை ஏமாற்றப்பார்க்கிறது பாஜக-ஆர்எஸ்எஸ் கூட்டம். உழைப்பாளி மக்கள் வணங்கும் கடவுள் குறித்த ஆர்எஸ்எஸ் பார்வை மோசமானது. உழைப்பாளி மக்கள் வணங்கும் தெய்வங்கள் சிறு தெய்வங்கள் என்பது தான் ஆர்எஸ்எஸ் பார்வை. மதுரையில் நடைபெற்ற செஞ்சட்டைப் பேரணி யில் கிருஷ்ணரை தவறாகப் பேசினார்கள் எனக் கூறுகின்றனர். அப்படித் தவறாகப் பேசிய வீடியோவை வெளியிட தயாரா? புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மத நல்லிணக்கத்தை வலி யுறுத்தும் “அறியப்படாத கிறிஸ்தவம்” என்ற நூலை பரிசளித்துள்ளார். மதவாதிகளின் எதிர்ப்பால் அவர் தமது முகநூல் பதிவை நீக்கிவிட்டார். ஆர்எஸ்எஸ் கூட்டத்தால் எத்தகைய ஆபத்து உள்ளது என்பதற்கு இது ஓர் உதாரணம். தமிழக அமைச்சர் மனோ.தங்கராஜ் ஒரு கிறிஸ்தவர். அவர் இந்துக்கோவிலில் தேர் இழுக்கக்கூடாது நாகர்கோவிலில் பாஜக சட்ட மன்ற உறுப்பினர் காந்தி தகராறு செய்துள்ளார். திராவிட இயக்கம் ஆலமரம் போல் வளர்ந்துள்ள தமிழகத்தில் நச்சு விதையை விதைக்க முயல்கிறது பாஜக.
நடிகை சாய் பல்லவி, தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தில், பண்டிட்டுகள் எவ்வாறு கொல்லப் பட்டார்கள் என்பதைக் காட்டி இருக்கிறார்கள். இதை மத மோதலாக எடுத்துக்கொண்டால், சமீபத்தில் பசுவை ஏற்றிச் சென்ற இஸ்லாமியரைத் தாக்கி, ஜெய் ஸ்ரீராம் என்று முழக்கமிடச் சொன்னதை என்னவென்று சொல்வீர்கள்? மதத்தின் பெயரால் நிகழ்த்தப்படும் எந்த வன்முறையும் தவறுதான், யாருடைய உயிரையும் எடுக்க, யாருக்கும் உரிமை கிடையாது. எனக் கூறியுள்ளார். எந்த ஒரு படைப்பும் பிரம்மாண்டமாகத் தான் இருக்கும், ஆனால் பிரம்மாண்டமான படைப்புகள் கருத்தியல் ரீதியாக வெற்றி பெறுகிறதா? எந்த கருத்து முன் வைக்கப்படுகிறது. அந்தக் கருத்தில் யதார்த்தமும், உண்மையும் உள்ளதா என்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும். ஆசிரியர்கள் சிலர் இன்றைக்கு மாணவர்களி டம் சாதி குறித்து உரையாடும் அபாயம் தமி ழகத்தில் நிகழ்ந்துள்ளது. ஆசிரியர்கள் சாதி குறித்துப் பேசினாலும், மாணவர்கள் “ எல்லோ ரும் சமம் தானே” என்று பேசுமளவிற்கு பக்குவப் பட்டுள்ளார்கள். இன்றைக்கு இந்தியாவில் பிராமணீய ஆபத்தும், பெரு முதலாளிகள் ஆபத்தும் நம் முன் உள்ளது. தனித்துவத்தின் உரிமை, பன்முகத் தன்மையின் வலிமை ஆகியவற்றின் மூலம் ஆபத்தான சக்திகளை முறியடித்து வெற்றி பெறுவோம் என்றார்.
ஆளூர் ஷாநவாஸ்
நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில நிர்வாகியுமான ஆளூர் ஷாநவாஸ் பேசியதாவது:- வட மாநிலங்களில் ஸ்ரீஇராமனால் பல இடை யூறு உள்ளது. தமிழகத்தில் ஸ்ரீஇராமனால் பாது காப்பு உள்ளது. பேரா.அருணன் பேசுகையில் பள்ளிவாசல் பாங்கு ஒலித்தது. அப்போது தமுஎகச மதுரை மாவட்டத் தலைவர் ஸ்ரீ (ரசா)வும், மாவட்டச் செயலாளர் (சாந்தா) ராமும் பாங்கு ஒலிப்பது குறித்து அருணனிடம் தெரிவித்தார்கள். அருணன் உடனடியாக முஸ்லிம்களின் பாங்கிற்கு மரியாதை, மதிப்பளித்து சில நிமிடங்கள் பேச்சை நிறுத்தினார். இது தான் தனித்துவத்தின் உரிமை. பன்முகத்தின் வலிமை. இந்த பன்மைத்துவத்திற்கு இன்று ஆபத்து வந்துள்ளது. “வேற்றுமை” தான் இந்தியாவின் அடிப்படை “வேற்றுமையில் ஒற்று மை” காண்பது தான் தனிச்சிறப்பு. நாம் பன்மு கத்தன்மை வேண்டுமென குரல் கொடுக்கிறோம். பாஜக-ஆர்எஸ்எஸ் அமைப்பு பன்முகம் கூடாது. இருக்கக்கூடாது, முடியாது என்கிறது. தமுஎகச, விடுதலைச் சிறுத்தைகள், மார்க்சிஸ்ட்டுகள், பெரி யாரிஸ்ட்டுகள், அம்பேத்காரிஸ்ட்டுகள் “முடியும்” என்பதை நிரூபிக்க போராடி வருகின்றனர்.
வன்முறைகள் பிரச்சனையல்ல...
“தனித்துவத்தின் உரிமை, பன்முகத்தின் வலிமை” என்ற கருத்து நாட்டின் விடுதலைக்காக ரத்தம் சிந்தியவர்கள் முன்வைத்த முழக்கம். இதைத் தகர்க்க பள்ளி-கல்லூரிகளில் பாஜக நச்சுக் கருத்தை விதைக்கிறது. கடந்தவாரம் உத்தரப்பிர தேசத்தில் நடைபெற்ற வன்முறையில் பலரை பிடித்து வந்து காவல்துறையினர் கொடூரமாகத் தாக்கினர். புல்டோசர் மூலம் இஸ்லாமியர்களின் வீடுகள் இடிக்கப்பட்டன. யாராவது வன்முறையில் ஈடுபட்டால் இதுதான் பரிசு என பாஜக சட்டமன்ற உறுப்பினர் வீடியோ வெளியிட்டார். அதே உத்தரப்பிரதேசத்தில் இந்த வாரம் வன்முறை நிகழ்ந்துள்ளது. இப்போது புல்டோசரை யும் காணவில்லை, காவல்துறை கொடுமையோ. தாக்குதலோ நிகழவில்லை. அதற்காக வன்முறை யை ஏற்பதாக அர்த்தம் அல்ல. அதற்கு எதி ரானவர்கள் நாம். பாஜக-விற்கு வன்முறை ஒரு பிரச்சனையல்ல. முஸ்லிம்கள் தான் பிரச்சனை. பாஜக-வினர் நீதிமன்றத் தீர்ப்பையோ, அரசியலமைப்பையோ மதிப்பதில்லை. அவர்கள் சித்தாந்தத்தை அமல்படுத்துவதிலேயே குறியாக உள்ளனர்.
சேஷசமுத்திரத்தில் இந்துக்களின் தேர் எரிந்தபோது பாஜக எதுவும் பேசவில்லை. சம்பவ இடத்திற்கு வரவும் இல்லை. அங்கே சென்று நிலைமையை அறிந்தது கம்யூனிஸ்ட்டுகள். விடுதலைச் சிறுத்தைகள். ஆனால் நாகர்கோவி லில் இந்துக்களுக்கு மதிப்பளித்து தேர் இழுக்க வந்த அமைச்சரிடம் பாஜக தகராறு செய்கிறது. அரசியலமைப்புச் சட்டத்தில் 22 மொழிகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இதில் 20 மொழிகள் புறக்கணிக்கப்படுகின்றன. சமஸ்கிருதம், இந்தி முன்னிலைப்படுத்தப்படுகிறது. இந்த இரண்டு மொழிக்கும் ஒதுக்கப்படும் நிதியையும் தமிழுக்கு ஒதுக்கப்படும் நிதியையும் ஒப்பிட்டால் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் உள்ளது. தாய்மொழியைத் தவிர அனைத்து மொழிகளும் நமக்கு அந்நிய மொழிகள் தான். ஆங்கிலம் பொது மொழியாக உள்ளது. அதை இந்திய மக்கள் அனை வரும் கற்றுக்கொள்கின்றனர். ஆனால், மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் சமஸ்கிருதம், இந்தியை தேர்வு செய்யும் நிலையை பாஜக உருவாக்குகிறது. இவர்களால் தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளுக்கு ஆபத்து நேர்ந்துள்ளது.
சிறப்பு அந்தஸ்து பிரச்சனையல்ல...
உணவிலும், உடையிலும், கலாச்சாரத்திலும் பாஜக வன்முறையை புகுத்துகிறது. பண்பாடு, அரசியல், அதிகாரம் ஆகியவற்றின் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துகிறது. காஷ்மீருக்கு மட்டும் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால் வடகிழக்கு மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து இன்னும் நீடிக்கிறது. பாஜக-விற்கு சிறப்பு அந்தஸ்து சட்டம் பிரச்சனையல்ல. முஸ்லிம்கள் தான் பிரச்சனை. பட்டியல் சமூகம், பழங்குடியின சமூகம், முஸ்லிம்கள், பிற்படுத்தப்பட்டவர்களில் ஓரிருவரை தலைவராக்கிவிட்டு அவர்களுக்கு வழங்கிய தனிமனித அதிகாரத்தை சமூக அதிகாரமாக பாஜக பார்க்கிறது. பிரதமர் மோடி பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் தான். ஆனால், மருத்துவக் கல்வியில் இடஒதுக்கீடு பிரச்சனை வந்தபோது அதற்கு எதிராக பேசியது மோடியும் அவரது சகாக்களும் தான். ஆர்எஸ்எஸ் உத்தரவை நிறை வேற்றுவது தான் பிற்படுத்தப்பட்ட, பட்டியல் சமூகம், பழங்குடி பாஜக தலைவர்களின் வேலை. ஆனால், கோரிக்கை என்று வந்தால் அவற்றை ஆர்எஸ்எஸ் புறக்கணிக்கிறது.
ஆர்எஸ்எஸ்-மதுரை ஆதீனம்
நாகூர் அனிபாவும் மதுரையின் முந்தைய ஆதீனம் அருணகிரியாரும் நெருக்கமான நண்பர்கள். அருணகிரியார் இறைவனிடம் கையேந்துங்கள், அவன் இல்லையென்று சொல்வதில்லை என்ற பாடலை கேட்பதை வழக்க மாகக் கொண்டவர். இன்றைக்கு முஸ்லிம்-இந்துக்கள் உறவின் மீது, ஒற்றுமையின் மீது, நம்பிக்கையின் மீது, கல்லெறியும் வேலையை பாஜக செய்து கொண்டிருக்கிறது. ஆர்எஸ்எஸ் கரு த்தை உமிழ்பவராக இன்றைய ஆதீனம்மாறிவிட்டார். நாட்டில் அமைதியும் ஒற்றுமையும் சீர்குலைந் தால் இலங்கைக்கு ஏற்பட்ட கதிதான் ஏற்படும். “தனித்துவத்தின் உரிமை, பன்முகத்தின் வலிமை யை” உரக்கச் சொல்வோம். வெற்றி பெறுவோம் என்றர். நிகழ்விற்கு மாவட்டத் தலைவர் ஸ்ரீரசா தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் அ.ந.சாந்தாராம் வரவேற்றார். நிகழ்வை மதுரை நம்பி ஒருங்கிணைத்தார். மானிடன் நன்றி கூறினார். நிகழ்வில் தமுஎகச மாநிலச் செயற்குழு உறுப்பினர் எஸ்.ஏ,பெருமாள் உட்பட ஏராள மானோர் பங்கேற்றனர்.