தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் (TNPSC) ஒருமுறை நிரந்தரப்பதிவு (One Time Registration - OTR) கணக்கு வைத்திருக்கும் அனைத்து தேர்வாளர்களும் தங்களது ஆதார் குறித்த விவரங்களை பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் தவறாமல் சமர்ப்பிக்கவேண்டும் என டிஎன்பிஎஸ்சி ஆணையம் அறிவுறுத்தி வருகிறது. எதிர்காலத்தில் தேர்வாணையத்தால் வெளியிடப்படும் அறிவிக்கைகளின் அடிப்படையில் தனது ஒருமுறை நிரந்தரப்பதிவு (OTR) கணக்கு மூலமாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இதுதொடர்பாக விளக்கம் ஏதேனும் தேவைப்படுமானால் 18004190958 என்ற கட்டணமில்லா தொலைப்பேசி அல்லது helpdesk@tnpscexams.in /grievance.tnpsc@tn.gov.in என்ற மின்னஞ்சல் மூலமாக தொடர்பு கொள்ளலாம்.(தொடர்பு நேரம் : அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை மட்டுமே) இந்த அறிவிப்பு தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கிரண் குராலா வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.