tamilnadu

img

சிதம்பரம் நகராட்சி துணைத்தலைவராக சிபிஎம் கவுன்சிலர் எம். முத்துக்குமரன் தேர்வு

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் சிதம்பரம் நகராட்சி 33 ஆவது வார்டில் வெற்றிபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  கவுன்சிலர் எம். முத்துக்குமரன் நகராட்சி துணைத் தலைவராக போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  துணைத் தலைவராக தேர்வு செய்த சான்றை சிதம்பரம் நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் அஜித்தா பர்வீன் வழங்கினார். இவருடன் சிதம்பரம் நகர்மன்ற தலைவர் கே ஆர் செந்தில்குமார் உள்ளிட்ட நகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.