tamilnadu

img

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக அபார வெற்றி முதலமைச்சர் ஸ்டாலினுக்கு திமுகவினர் வாழ்த்து

சென்னை,பிப்.22- நகர்ப்புற உள்ளாட்சித் தேர்த லில் பதிவான வாக்குகள் அனைத் தும் பிப்.22 அன்று காலை 8  மணிக்கு எண்ணக் தொடங்கினர்.  ஆரம்பம் முதல் திமுக தலைமை யிலான மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் கள் முன்னிலை வகித்து வந்தனர். அந்த முன்னிலை இறுதி  வரைக்கும் நீடித்தது. இதனால் திமுக கூட்டணி மிகப் பெரிய  அளவில் வெற்றியை பெற்றுள் ளது. திமுக வெற்றியை அடுத்து  சென்னையில் உள்ள அக்கட்சி யின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் குவிந்த தொண்டர்கள் பட்டாசு களை வெடித்து ஆடி, பாடி வெற்றியை கொண்டாடினர். இந்நிலையில் முதலமைச் சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை சென்னையில் உள்ள முகாம் அலுவலகத்தில், திமுக முக்கிய நிர்வாகிகள் சந்தித்து உள்ளாட்சித் தேர்தல்  வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த னர். மாநில நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆ.ராசா, தயாநிதி மாறன், தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத் தலைவர் வாகை  சந்திரசேகர், ஆகியோர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பொன்னாடை அணிவித்து மகிழ்ச் சியை பகிர்ந்து கொண்டனர்.