சென்னை, ஜூலை 27- உடலை சீராக வைத்துக் கொள்ள அண்ணாமலை நடை பயணம் மேற்கொள்கிறாரா என்று தெரிய வில்லை. அவர் எத்தனை குட்டிக்கர ணம் அடித்தாலும் 40 மக்களவைத் தொகுதிகளிலும் திமுக கூட்டணி தான் வெல்லும் என அண்ணாமலை யின் நடைபயணம் குறித்து விமர் சித்துள்ளார் அமைச்சர் சேகர்பாபு. சென்னை பாரிமுனை தம்பு செட்டி தெருவில் தனியார் ஆக்கிர மிப்பில் இருந்து மீட்கப்பட்ட கோயி லுக்கு சொந்தமான கட்டிடத்தில் முத்துக்குமாரசுவாமி திருக்கோயில் சார்பில் அமைக்கப்படவுள்ள மருத்துவ மையத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்க ளிடம் கூறுகையில், “2022-2023 ஆம் ஆண்டுகளில் பக்தர்கள் அதிகம் வருகை தரும் 5 கோயில்களில் மருத்துவமனை அமைக்கப்பட் டுள்ளது என்றும், இதுவரை மொத்த மாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 15 மருத்துவமனைகள் செயல்பட்டு வருகிறது”என்றார். சென்னை தம்பு செட்டி தெருவில் உள்ள முத்துக்குமார சுவாமி கோயி லுக்கு சொந்தமான இடத்தை 1980ஆம் ஆண்டு முதல் தனியார் ஒருவர் ஆக்கிரமித்து, சட்டவிரோத மாக 13 அங்காடிகளுக்கு வாட கைக்கு விட்டு இருந்த நிலையில், சட்டப்படி ரூ. 10 கோடி மதிப்புள்ள இந்த இடம் மீட்கப்பட்டுள்ளது என்றும் இந்த இடத்தில் விரைவில் மருத்துவமனை அமைக்கப்பட உள்ளதாகவும் அவர் கூறினார். திமுக அமைச்சர்கள் மீது அண்ணாமலை ஆளுநரிடம் கொடுத்திருக்கும் புகார் குறித்து எழுப்பிய கேள்விக்கு, எத்தனை கோப்புகள் கொடுத்தாலும் எங்க ளுக்கு கவலையில்லை. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வழங்கிய பெட்டியை, ஆளுநர் இன்னும் திறந்து பார்த்தாரா? இல்லையா? என்று கூட தெரிய வில்லை. எங்களுக்கு மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை என்றார்.