சென்னை,பிப்.19- தமிழ்நாட்டில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 21 மாநகராட்சி களையும் திமுக கூட்டணியே கைப் பற்றும் என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் தெரிவித்தார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களித்த முதலமைச்சர் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது,“உள்ளாட்சி அமைப்பு என்பது சிறு குடியரசு என்று மகாத்மா காந்தி கூறியிருக்கிறார். அரசின் திட்டங் களை உள்ளாட்சி அமைப்புகள் மூலமா கவே நிறைவேற்ற முடியும் என்பதால் மக்கள் தவறாமல் வாக்களிக்க வேண் டும்”என்றார். பிறகு செய்தியாளர்கள் எழுப்பிய கேள்வியும் முதலமைச்சரின் பதிலும் வருமாறு:- அதிமுகவுக்கு தோல்வி பயம் கோவையில் அதிமுக எம்.எல்.ஏ. க்கள், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் கைதாகியிரு க்கிறார்கள். அங்கு சிறப்பு அதிகாரியும் நியமிக்கப்பட்டுள்ளாரே? பதில்: அதிமுக ஆட்சியின்போது கோவையில் பல்வேறு அட்டூழியங்கள், அயோக்கியத்தனங்கள் நடைபெற்றுள் ளன. இப்போது ஆட்சி மாற்றத்திற்கு பிறகு அது ஒடுக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தலை நடத்த ராணு வத்தை வரவழைக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் வேலுமணி தலை மையில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். ஆனால் ராணுவத்தை வரவ ழைத்து தேர்தலை நடத்தும் அளவுக்கு ஒன்றும் நடந்து விடவில்லை.
தோல்வி பயத்தால் அதிமுகவினர் இதுபோன்று செயல்பட்டுள்ளனர். கேள்வி: 9 மாத கால திமுக ஆட்சிக்கு பரிசளிக்கும் வகையில் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் இருக்கும் என்று நினைக்கிறீர்களா? பதில்: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மக்கள் மிகுந்த ஆர்வத்தோடு வாக்களித்து வருகிறார்கள். கடந்த 9 மாதத்தில் நாங்கள் செய்துள்ள நல்லாட்சிக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் தேர்தல் முடிவுகள் நிச்சயம் அமையும். கேள்வி: எத்தனை மாநகராட்சிகளை திமுக கூட்டணி கைப்பற்றும்? பதில்: 21 மாநகராட்சிகளையும் நிச்சயம் திமுக கூட்டணி கைப்பற்றும். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும். கேள்வி:- நகைக்கடன் தள்ளுபடி விவகாரத்தில் அதிமுக பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளதே? பதில்:- அதிமுக ஆட்சியில் நகைக் கடன் வழங்கப்பட்டதில் பல்வேறு முறை கேடுகள் நடந்துள்ளன. போலியான நகைகளையும் அடகு வைத்து கடன் வாங்கியிருக்கிறார்கள். சில இடங்களில் வெறும் பொட்டலங்களை மட்டும் வைத்து கடன் வாங்கி இருக்கிறார்கள். இதையெல்லாம் முறைப்படுத்தி வருகிறோம். உரிய விதிமுறைகளுடன் நகைக்கடன் வாங்கியவர்களுக்கு திமுக ஆட்சியில் முறையாக ஆய்வு செய்து நகைக்கடன் தள்ளுபடி செய்ய ப்பட்டுள்ளது. இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறி னார்.